states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

தேசபக்தி இதுதானா?

ஜம்மு - காஷ்மீரில் ரியாஸி பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் மிகவும் துணிச்சலுடன் லஷ்கர் -இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கர வாதிகளை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வர்களில் ஒருவர், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வர் என தெரியவந்திருப்பதாகவும், அவர் அக்கட்சி யின் ஐடி மற்றும் சமூகஊடகப் பிரிவு தலைவராக 2 மாதங்களுக்கு முன்பு வரை செயல்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


இது மிக மிக கடுமையான ஒரு பிரச்சனையாகும். ஆளும் பாஜகவிடமிருந்து இன்னும் பதில் வர வில்லை. அரசு தரப்பிலிருந்து எவ்வித பாரபட்சமும் இல்லாத விசாரணை இதில் தேவைப்படுகிறது. ஜம்மு - காஷ்மீராக இருந்தாலும் சரி அல்லது ஏற்க னவே ராஜஸ்தானில் நடந்த படுகொலை சம்ப வத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய இதே போன்ற  தகவல்களாக இருந்தாலும் சரி இரண்டு மிக மிக தீவிரமான பிரச்சனைகள்.  

பாஜகவினரின் இத்தகைய பயங்கரவாத தொடர்பு கள் குறித்து நேர்மையான, பாரபட்சமற்ற விசா ரணை மிகவும் அவசியம். இவர்களது கைகளில் இந்திய தேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கும்?