விஎச்பி, பஜ்ரங் தள் குஜராத்திலும் வன்முறை மக்களவை தேர்தல் நெருங்குவதால் நாட் டின் பெரும்பாலான இடங்களில் பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி), பஜ்ரங் தள் உள்ளிட்ட இந் துத்துவா அமைப்புகள் வெறுப்புப் பேச்சு, மத ஊர்வ லங்கள் மூலம் மத வன்முறை யை அரங்கேற்றி வருகின்றனர். சமீபத்தில் பஜ்ரங் தள் அமைப்பு ஏற்படுத்திய மத வன்முறையில் ஹரியானா மாநிலத்தின் நூஹ் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் உருக்குலைந்த நிலையில், அடுத்து குஜராத் மாநிலத்தில் விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகள் இணைந்து மத வன்முறை பதற்றம் தூண்டிவிடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் விஎச்பி- பஜ்ரங் தள் அமைப்பினர் கூட்டாக நடத்திய “ஷவுரிய ஜக்ரான் யாத்ரா” என்ற யாத்திரை செலம்பா நகர் மசூதி அருகே கடக்க தயாராக இருந்த பொழுது விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்பி னர் கல்வீச்சு மூலம் வன்முறையை தூண்டினர். அதாவது மசூதியை நோக்கி கல்வீச்சு நடத்தி யுள்ளனர். உடனே மசூதி அருகே இருந்த முஸ்லிம் மக்கள் பெருந்திரளாக கூட, விஎச்பி - பஜ்ரங் தள் குண்டர்களும் மோதலுக்கு தயாராக பதற்ற மான சூழல் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சம யத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த கல்வீச்சில் போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில், இருதரப்பையும் சேர்ந்த 17 பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.