states

img

பாஜக ஆட்சியில் ஊழல்வாதிகள் கொண்டாட்டமாக இருக்கின்றனர்!

புதுதில்லி, பிப்.19- மறைந்த பிரதமர் இந்திரா காந்தி யின் பேரனும், சஞ்சய் காந்தி - மேனகா காந்தி தம்பதியின் மகனுமான வருண் காந்தி, பாஜக எம்.பி.யாக இருந்த போதும், மோடி அரசின் தவறான நட வடிக்கைகளை விமர்சித்து வரு கிறார். உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கெரியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, விவசாயிகள் 4 பேரை காரை ஏற்றி படுகொலை செய்தார். அப் போது, “லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு நீதி வேண்டும். இந்த விவகாரத்தில், விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொலை செய்திருப்பது, கிரிஸ்டல் கிளியராக வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, அவர்கள் (பாஜக தலைவர் கள்) கைது செய்யப்பட வேண்டும்” என்றார்.  ஒமைக்ரான் தொற்றுப் பரவலை கணக்கில் கொள்ளாமல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உ.பி.யில் தேர்தல் பிரச் சாரம் நடத்தியபோது, “இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு பக லில் லட் சக்கணக்கானோரை ஒருங்கி ணைத்து பேரணி நடத்துவது என்பது சாமானியனின் புரிதலுக்கு அப்பால் இருக்கிறது” என்று பகிரங்கமாக சாடி னார்.  இந்நிலையில், “தற்போதைய பாஜக அரசில் பொருளாதார குற்ற வாளிகளான விஜய் மல்லையாவின் 9000 கோடி, நிரவ் மோடியின் ரிஷி அகர்வாலின் 23000 கோடி ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய விமர்சனத்தை வைத்துள்ளார். “நாட்டில் இப்போது கடன் சுமை யால் ஒவ்வொரு நாளும் சுமார் 14 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பண முதலைகளின் வாழ்வு உச்சநிலை மகிழ்ச்சியில் உள்ளது. இத்தகைய ஊழல்களுக்கு எதிராக ஒரு வலுவான அரசு வந்து வலுவான நடவடிக்கை எடுக்கும் என எதிர் பார்ப்பு உள்ளது” என்றும் குறிப்பிட் டுள்ளார்.