states

img

தர்மத்தின்படி அல்ல, பொய்களைச் சொல்லியே வாக்கு சேகரிக்கிறார் மோடி!

புதுதில்லி, மார்ச் 5- தர்மத்தில் அடிப்படையில் அல்லாமல் பொய்களின் அடிப்ப டையிலேயே பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிப்பதாக காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேர வைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது வரை 6 கட்டத் தேர்தல் முடிந்து விட்டது. இறுதிக்கட்டத் தேர்தல் மார்ச் 7-ஆம் தேதி நடைபெற உள் ளது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாரணாசி யில் வெள்ளிக்கிழமையன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.  அப்போது, “விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்கு தல் போன்ற தனது முந்தைய வாக் குறுதிகள் குறித்து பிரதமர் மோடி பேசுவதில்லை. ஹிந்து மத புனித நூல்கள் பொய் பேசுமாறு எங்கும் கூறவில்லை. ஆனால், பிரதமர் மோடி பெறும் வாக்குகள் தா்மத் தின் பெயரால் பெறப்படுபவை அல்ல. பொய்களை அடிப்படை யாகக் கொண்டு பெறப்படுபவை யாக உள்ளன” என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “பிரதமர் மோடி இரட்டை என்ஜின் வளர்ச்சி குறித்து பேசி வருகிறார். ஆனால், அவரின் இரட்டை என்ஜின் என்பது தொழி லதிபர்களான அதானியும் அம்பா னியும்தான். இதுபோன்ற இரட்டை என்ஜின்களால் வேலைவாய்ப்பு களை ஒருபோதும் வழங்க முடி யாது” என்றும் ராகுல் காந்தி குறிப் பிட்டுள்ளார்.