புதுதில்லி, ஜூலை 20 - சமூக அமைதியை சீர்குலைத்த தாக உத்தரப் பிரதேச பாஜக அரசு தொடர்ந்த வழக்குகளில் முகம்மது ஜூபைருக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால ஜாமீன் வழங்கியுள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மை யை சரிபார்க்கும் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதள செய்தி நிறு வனத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜூபைர், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாக டுவிட்டரில் கருத்து பதி விட்டார் என்பதற்காக அண்மையில் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அதாவது, கடந்த 2018-ஆம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2022 ஜூன் 27-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், முகம்மது ஜூபைருக்கு தில்லி நீதி மன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி யது. இதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரப்பட்ட வழக்கு களில் ஒரு வழக்கில் மட்டும் இடைக்கால ஜாமீன் கிடைத்திருந்தது. வேறுபல வழக்குகளில் ஜூபைர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சிறையிலேயே வைக்கப்பட்டார்.
இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 6 காவல் நிலையங் களில் தனக்கு எதிராக பதிவு செய்யப் பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ஜூபைர் உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன்பு புதனன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, ஜூபைரின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது உத்தரப் பிரதேசத்தில் தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி சந்திரசூட் தலைமை யிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. “தில்லி காவல்துறை தொடர்ந்த வழக்கும் இந்த வழக்குகளும் ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து வழக்கு களையும் ஒரே வழக்காக மாற்றி நேர்மை யான முறையில் விசாரணை நடத்த வேண்டும். மேலும், ஜூபைரை சிறை யில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். இம்மாதிரியான வழக்கு களில் குறைவான சூழ்நிலையிலே கைது செய்ய வேண்டும். ஜூபைரை காவலில் வைத்திருப்பது எந்தவித நியாயமும் இல்லை” என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.