வாரணாசி, மார்ச் 8- தனது தொகுதியான வாரணாசி யில் சாக்கடை கழிவு நீர் கங்கையில் கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டது என்ற பிரதமர் மோடியின் அறி விப்பு மிகப்பெரிய பொய் என்பது அம்பலமாகியுள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதியன்று பிரத மர் நரேந்திர மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கங்கை ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நிறுத்தப்பட்டு விட்டது என்ற அவர், எட்டு ஆண்டு களுக்கு முன்பாக இந்த கோவில் நகரத்திற்கு கங்னை அன்னை தன்னை அழைத்ததாகவும், தூய் மைப்படுத்த ஆணையிட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்னை யின் ஆணையை நிறைவேற்றி விட்ட தாகப் பெருமிதத்துடன் அவர் தெரி வித்தார். உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் இவ்வாறு அவர் பேசினார். அதிலும் குறிப்பாக, மார்ச் 7 ஆம் தேதியன்று வாரணாசி மற்றும் அதன் சுற்றுப்புற தொகுதி களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடப்பதை மனதிற் கொண்டே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதை அவர் தெரிவித்த மறு நாளே, உத்தரப்பிரதேச நீர் வாரி யத்தின் பொறியாளர்களில் ஒருவர் இதை மறுத்தார். ஒவ்வொரு நாளும் குறைத்தது ஒரு கோடி லிட்டர் சாக் கடை கழிவு நீர் கங்கையில் கலப்ப தாக அவர் தெரிவித்தார். தற்போது மேலும் விபரங்கள் அம்பலமாகியுள்ளன. “சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவு நீர் கங்கையில் கலப்பது தொடர்கிறது. வாரணாசி நகரில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு சரா சரியாக 2 கோடி லிட்டர் ஆற்றில் கலக்கிறது. மேலும் நிலைமை மோச மாகி வருகிறது” என்று ஆறு மாசு படுதல் தடுப்பு வல்லுநர்களில் ஒரு வரான சவுரப் சிங்கும், நீர் வாரி யத்தின் பிற அதிகாரிகளும் தெரி வித்துள்ளனர். நிலைமை மோசமாகி வருவ தற்கு அரசின் இரண்டு புதிய திட்டங் கள்தான் காரணம் என்று சவுரப் சிங் சுட்டிக்காட்டுகிறார்.
ஆற்றின் படு கையை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டங்கள் நடைபெறுகின்றன. கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் பின்னுக்குப் போய் வருமானம் ஈட்டும் திட்டத்தின் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இந்த விபரங்களை மறைத்துத் தான் உள்ளுர் பாஜக-காரர்களிடம் பிரதமர் பேசும்போதும், “நகரில் உள்ள 80 சாக்கடைக் வாய்க்கால் களில் வரும் அனைத்து கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்ட பின்புதான் கங் கையில் கலக்கிறது. முதலில் சுத்தி கரிப்பு ஆலைகளுக்குதான் கழிவு நீர் செல்கிறது” என்று தெரிவித்தார். ஒப்புதல் பிரதமரின் இந்தப் பேச்சு குறித்து ‘தி டெலிகிராப்’ நாளிதழ், உத்தரப் பிரதேச நீர் வாரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதி லளித்த அதிகாரிகள், “ஒவ்வொரு நாளும் 4 கோடியே 50 லட்சம் லிட்டர் சாக்கடைக் கழிவு நீர் வாரணாசியில் உருவாகிறது.
அதில் 2 கோடியே 50 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவு நீரை மட்டுமே நாங்கள் சுத்திக ரிக்கிறோம். எஞ்சியுள்ள 2 கோடி லிட்டர் நேரடியாக கங்கையில் கலக்கிறது. ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் முழுமையாக வேலை செய்யாதது, இதற்குக் காரணமா கும். இதேபோல காரணங்கள் பல உள்ளன. படுமோசமான நிர்வாக மும் அந்தக் காரணங்களில் ஒன்றா கும்” என்று கூறியுள்ளனர். இந்தப் புள்ளி விபரங்கள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள சவுரப் சிங்கும், “4 கோடியே 50 லட்சம் லிட்டர் கழிவு நீரில் 2 கோடியே 50 லட்சம் கழிவு நீரைச் சுத்திகரிக்கி றார்கள் என்றாலும், அதுவும் அன்றா டம் நடக்கவில்லை. சுத்திகரிப்பு ஆலைகள் பராமரிக்கப்படாததே இதற்குக் காரணம்” என்று குறிப் பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடு ஒரு முக்கி யமான பிரச்சனை என்று ஒப்புக் கொள்ளும் அதிகாரிகள், பராம ரிப்புப் பணிகளை வெளியில் தந்து விட்டோம். கடந்த ஒரு ஆண்டாக எங்களுக்கு எந்த நிதியும் வர வில்லை என்கிறார்கள்.
20 ஆயிரம் கோடி
கங்கையைத் தூய்மைப்படுத் தும் பிரச்சனையை தேர்தல் பிரச்சா ரமாக மாற்றிய மோடி, பதவியேற்ற வுடன் 20 ஆயிரம் கோடி ரூபாயை அதற்காக ஒதுக்கினார். மேலும் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால், இவ்வளவு பெரிய தொகை செலவு செய்தும் கங்கையில் கழிவு நீர் கலப் பது தடுக்கப்படவில்லை என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. வாரணாசியில் படகு ஓட்டும் மன்னு சஹானி “15 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் கங்கை நீரை நாங்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தி னோம். தற்போது குழாயில் வரும் நீரைத்தான் பிடித்து அருந்து கிறோம். அது வாரத்திற்கு ஒரு முறை, அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே வருகிறது” என்று தெரிவிக்கிறார். பக்தர்களுக்காக என்று இருந்த வாரணாசி, சுற்றுலாப் பயணி களுக்கான நகரமாக மாறி வருகிறது என்று சவுரப் சிங் சொல்கிறார். உணவு அருந்துவதற்கும், பொழுது போக்குக்குமான இடங்களை உரு வாக்க முனைந்துள்ளனர். ‘காசி விகாஸ் சமிதி’ என்ற அமைப்பின் தலைவரான சந்திரசேகர் கபூர், “மோடி மீது மக்களுக்கு சலிப்பு ஏற்படத் துவங்கியுள்ளது. எப்போ தும், பெரும் ஆர்வத்துடன் யாரை யும் வரவேற்கும் பாரம்பரியம் வார ணாசிக்கு உண்டு. ஆனால் தவ றான நபரை வரவேற்று விட்டோம் என்று தெரிந்தால் அமைதியாக தூக்கி எறிந்து விடுவார்கள்” என்று உறுதியுடன் கூறுகிறார்.