லக்னோ, மார்ச் 1- உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்தவர் சுவாமி பிரசாத் மவுரியா. பிற் படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற தலைவரான இவர், அண்மை யில் அமைச்சர் பதவியை அதிரடி யாக ராஜினாமா செய்ததோடு, பாஜகவிலிருந்து விலகி சமாஜ் வாதி கட்சியில் இணைந்தார். தற்போது உ.பி. சட்டப்பேர வைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக குஷிநகர் மாவட்டம் பஸில்நகர் தொகுதி யில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜகவில் சுரேந்திரா குஷ்வாஹா போட்டியிடுகிறார். சுவாமி பிரசாத் மவுரியா, சமாஜ்வாதியில் இணைந்த போதே அவரது மகளும் பதாயூ தொகுதி எம்.பி.யுமான சங்க மித்ரா மவுரியாவும் பாஜகவிலி ருந்து விலகுவார் என்று கூறப்பட் டது. ஆனால், “நான் பாஜகவில் இருக்கிறேன், இருப்பேன்” என்று சங்கமித்ரா கூறி விட்டார். இந்நிலையில், பஸில்நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சுரேந்திரா குஷ் வாஹாவுக்கு வாக்குசேகரிக்கா மல், அங்குள்ள ஜவுரா முகுலி கிராமத்தில், தனது தந்தை சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு வீடு, வீடாகச் சென்று சைக்கிள் சின்னத்தில் வாக்குசேகரித்தது பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சங்கமித்ரா தந்தைக்கு வாக்குச்சேகரித்ததை உள்ளூர் பாஜகவினர், பத்திரிகையாளர் கள் பார்த்து விட்ட நிலையில், அவர்கள் சங்கமித்ராவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், தான், அவர்கள் கூறு வதுபோல தந்தைக்கு வாக்கு எதுவும் சேகரிக்கவில்லை என்று மறுத்துள்ளார். எனினும், குஷி நகர் பாஜகவினர் சங்கமித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பாஜக தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முன்பொரு முறை பத்திரிகை யாளர்களுக்குப் பேட்டியளித்த சங்கமித்ரா, “உ.பி. மாநிலம் முழு வதும் பாஜகவுக்காக பிரச்சா ரம் செய்வேன். ஆனால், கட்சி வேண்டுகோள் விடுத்தாலும், என் தந்தைக்கு எதிராக பிரச்சா ரம் செய்ய மாட்டேன்” என்று கூறி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.