புதுதில்லி, மே 19- முதுகலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (சியூஇடி) இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஜெகதேஷ் குமார் வியாழக்கிழமை தெரிவித்தார். முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு 2022-ஆம் கல்வி அமர்வில் இருந்து அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை மூன்றாவது வாரத்தில் இதற்கான தேர்வு நடைபெறும். விண்ணப்ப விநியோகம் வியாழக்கிழமை தொடங்கிவிட்டது. விண்ணப்பங்கள் விநியோகம் ஜூன் மாதம் 18-ஆம் தேதி முடிவடையும். கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறை பின்பற்றப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு நடத்தப்படும் என்று ஜெகதேஷ்குமார் தெரிவித்தார்.