states

img

மே 26 முதல் 31 வரை தொடர் போராட்டம்

புதுதில்லி, மே 2- ஒன்றிய அரசாங்கத்தால் நிறை வேற்றப்படாமல் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் மே 26 முதல் 31 வரை தொடர் போராட்டங் களில் ஈடுபடுவதென, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) தீர்மானித்துள்ளது. எஸ்கேஎம் என்னும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) தேசியக் குழுக் கூட்டம் ஏப்ரல் 30 (ஞாயிறு)  அன்று தில்லியில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் தலை வர்கள் இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத் தில் எஸ்கேஎம் தலைவர் தர்ஷன் பால்,  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலை வர்கள் அசோக் தாவ்லே, ஹன்னன்முல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அசோக் தாவ்லே பேட்டி 

பின்னர் ‘பிரஸ் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அசோக் தாவ்லே கூறியதாவது: 2021 டிசம்பர் 9 அன்று விவசாய சங்கங் களுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதி மொழிகளை ஒன்றிய அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை. வேளாண் சட்டங் களுக்கு எதிராக எஸ்கேஎம் ஓராண்டு காலத் திற்குப் போராட்டம் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம், வேளாண்  சட்டங்களை ரத்து செய்த போதிலும், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்திட, அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீ காரம் அளித்திடவும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந் துரையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட சம்யுக்த  கிசான் மோர்ச்சா தலைவர்களை உள்ளடக்கி ஒரு குழுவை அமைத்து, அதனை நிறை வேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். எனினும் இதனைச் செய்திட அரசு  இது வரை முன்வரவில்லை.   கடந்தாண்டு மார்ச் 20 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் ‘கிசான் பஞ்சா யத்து’ பேரணி நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல லட்சக் கணக்கான விவசாயிகள் வந்து கலந்து கொண்டார்கள். இருப்பினும் ஒன்றிய அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை. 

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்

விவசாயிகளுக்கு, கடனிலிருந்து விடு தலை அளிக்கப்பட வேண்டும், விவசாயப் போராட்டத்தின்போது உயிரிழந்த விவ சாயிகளின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மின்கட் டண சட்டமுன்வடிவு விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஐயாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், விரிவான அளவில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் முதலான முக்கிய கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர்கெரி யில் விவசாயிகள் கொலை செய்யப்பட்டது  தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் மீது  இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

மாநில, மாவட்ட அளவில்...

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 26 முதல் 31 வரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடை பெறும். இப்போராட்டங்களில் அந்தந்த பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அர சியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். மேலும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் மாநில  அளவிலும், மாவட்ட அளவிலும் மாநாடுகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 15 வரை தொழி லாளர் சங்கங்களுடனும் இணைந்து மாபெரும் போராட்டங்கள் மேற்கொள்ளப் படும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர் களின் நலன்களை,  கார்ப்பரேட் நிறு வனங்களுக்குத் தாரை வார்த்திட, ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட இப்போ ராட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். ‘அகில இந்திய தியாகிகள் தினம்’ குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் களைக் காணவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பேரணிகள் சிறப்பு  கவனத்துடன் நடத்தப்படும். பாஜக தலை வர்களால் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று அகில இந்திய தியாகி கள் தினம் அனுசரிக்கப்படும். நிறைவாக, வரலாற்றுச் சிறப்புமிக்க ‘தில்லி சலோ’ அணிவகுப்பு தில்லியின் எல்லையை அடைந்த நாளான நவம்பர் 26 அன்று துவங்கி அனைத்து மாநிலத் தலை நகரங்களிலும் 3 நாள்கள் தொடர் தர்ணா நடத்தப்படும்.” இவ்வாறு அசோக் தாவ்லே தெரிவித்தார்.

கண்டனம்

முன்னதாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்திய அஞ்சல் ஊழியர்களின் பழைமை யான தொழிற்சங்கங்களான தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆகியவை விவ சாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து நன்கொடை அளித்ததற்காக இந்த சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு  ரத்து செய்துள்ளதை, எஸ்கேஎம் கண்டித் தது. அவற்றின் அங்கீகாரங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது. நாடாளுமன்ற வீதியில், போராடிக் கொண்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகள்-வீரர்களின் போராட்டத்திற்கும் எஸ்கேஎம் ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கும், எஸ்கேஎம்மிற்கும் உறுதியான ஆதரவாளராக இருந்த ஜம்மு- காஷ்மீர் முன்னாள் துணை ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு எதிராக ஒன்றிய அர சாங்கம் திட்டமிட்டு பழிவாங்கும் விதமாக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருப்ப தையும் எஸ்கேஎம் கண்டித்துள்ளது. (ந.நி.)