புதுதில்லி, மார்ச் 15- கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக, சுற்றுலாத் துறையில் கடந்த 2 ஆண் டுகளில், 2 கோடியே 15 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாக ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை அமைச் சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் திங்களன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கிஷன்ரெட்டி பதிலளித் துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: கொரோனா தொற்றுப் பரவ லுக்கு முன்பாக, இந்திய சுற்றுலாத் துறையில் 3.80 கோடி பேர் பணி புரிந்தனர். இந்நிலையில் கொரோனா முதல் அலையின்போது 93 சதவிகி தம், இரண்டாம் அலையின்போது 79 சதவிகிதம், மூன்றாம் அலையின் போது 64 சதவிகிதம் என்ற அளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால், சுற்றுலாத்துறையை நம்பியிருந்தவர்கள் வேலையிழந்தனர். முதல் அலையில் 1 கோடியே 45 லட்சம் பேர், இரண்டாம் அலை யில் 50 லட்சத்து 20 ஆயிரம் பேர், மூன்றாம் அலையில் 10 லட்சத்து 80 ஆயிரம் பேர் என மொத்தம் 2 கோடி யே 15 லட்சம் பேர் வேலையிழந்தி ருப்பது ஆய்வில் தெரியவந்துள் ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுலா தொழில் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க சுற்றுலா நிறுவனங்க ளுக்கு ரூ. 10 லட்சமும், சுற்றுலா வழி காட்டிகளுக்கு ரூ. 1 லட்சமும் வட்டி யில்லாமல் அரசு சார்பில் கடன் வழங் கப்படுகிறது. மேலும், சர்வதேச சுற்றுலா பய ணிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் 5 லட்சம் பயணிகளுக்கு இல வச விசா வழங்கும் திட்டமும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கிஷன் ரெட்டி தெரி வித்துள்ளார்.