states

img

துரதிர்ஷ்டம்.. நாட்டின் பிரதமரே மத வெறுப்பை விதைக்கிறார்

மோடியின் வாரணாசி பேச்சை சாடிய  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

மும்பை, ஜன. 21 - மத அடிப்படையிலான வெறுப்புப் பேச்சுக் களை பார்த்து மவுனம் சாதிப்பது மட்டு மல்லாமல் அதனை ஊக்கப்படுத்துபவர்களாக வும் இன்றைய இந்திய ஆட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக கடந்த டிசம்பரில் வாரணாசிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு காசி விஸ்வநாதர் கோயில் நடை பெற்ற விழாவில் முகலாயப் பேரரசர் அவுரங்க சீப்பையும், மராத்திய மன்னர் சிவாஜியையும் ஒப்பிட்டுப் பேசினார்.  “ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நகரத்தைத் தாக்கினர், இதனை அழிக்க முயன்றனர். அவுரங்கசீப்பின் அட்டூழியங்களுக்கும், அவரது பயங்கரவாதத்துக்கும் வரலாறு சாட்சி.  அவர் வாளால் நாகரிகத்தை மாற்ற முயன்றார்.  கலாச்சாரத்தை வெறித்தனத்தால் நசுக்க முயன்றார். ஆனால், இந்நாட்டின் மண் உலக  நாடுகளிலிருந்து வேறுபட்டது. இங்கே ஒரு அவுரங்கசீப் வந்தால், ஒரு மராட்டிய வீரர் (சிவாஜி) வீறுகொண்டு எழுகிறார்” என்று மோடி குறிப்பிட்டார். இந்நிலையில், மும்பையில் உள்ள டிஎம் ஹரிஷ் சட்டக்கல்லூரியில் ஜனவரி 14 அன்று நடைபெற்ற விழாவில், “சட்டத்தின் ஆட்சி யின் அரசியலமைப்பு அடித்தளங்கள்” என்ற  தலைப்பில் பேசிய முன்னாள் நீதிபதி ரோகிண் டன் பாலி நாரிமன், பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது வாரணாசி உரையை விமர்சித்தார்.

“உண்மையில், நமது அரசியலமைப்பில் சகோதரத்துவம் ஒரு முக்கிய மதிப்பு வாய்ந்தது. அதன்படி, சகோதரத்துவத்தை நோக்கி மக்க ளை ஈடுபடுத்த விரும்பினால், நீங்கள் (பிரதமர் மோடி) மதச்சார்பற்ற தலைவர் என்று அறி யப்பட்ட சிவாஜிக்கு எதிராக ஒரு மத வெறியராக அறியப்பட்ட முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை முன்னிறுத்துவதற்குப் பதில், பாபர் அல்லது அவரது பேரன் அக்பர்  போன்றவர்களை உதாரணத்துக்கு தேர்ந்தெடுத் திருக்க வேண்டும். ஏனெனில் அக்பர் எந்தக் காலத்திலும் எந்த நாடும் அறிந்திராத மதச்சார் பற்ற ஆட்சியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்”  என்று ரோகிண்டன் பாலி நாரிமன் குறிப்பிட்டார். மேலும், பாபரின் சகிப்புத்தன்மை எத்தகை யது என்பதை விவரிக்கும் வகையில், அவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தை, நாரிமன் வாசித்துக் காட்டினார். “ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங் களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு அரசர்களின் அரசனான கடவுளுக்கு நன்றி செலுத்து. கீழ்கண்ட கடமை களை நீ கட்டாயம் நிறைவேற்று.

மத உணர்வு களுக்கு உரிய மதிப்புக் கொடு. மத மாச்சரி யங்களுக்கு உனது மனது ஆட்பட அனு மதிக்காதே. சார்பற்ற நீதியை வழங்கு. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது  இந்திய மக்களின் இதயங்களில் இடம்பிடிக்க  உனக்கு உதவும். இதன்மூலம் நன்றிக்  கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படு வாய். எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது. எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு. அது  அரசனுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுற வைப் பராமரிக்கும். அதன்மூலம் பூமியில்  அமைதியும் திருப்தியும் நிலவும். இஸ்லா மைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட, அன்பு என்ற வாளால்  மேற்கொள்வது நல்லது. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடு களைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும். உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை ஒரு ஆண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது” என்று பாபர் அறிவுறுத்தி இருந்ததை நாரிமன் சுட்டிக்காட்டினார்.

ஆனால், “துரதிர்ஷ்டவசமாக ஆளும் கட்சி யின் மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் வெறுப்புப் பேச்சை மவுனமாக பார்ப்பதுடன், கிட்டத்தட்ட அதை ஆமோதித்தும் வருகின்றனர். அத னால்தான், ஒட்டுமொத்த சமூகத்தையும் இனப்படுகொலை செய்வோம் என்று அழைப்பு விடுக்கும் வெறுப்புப் பேச்சுகளை வழங்கு பவர்கள் (ஹரித்துவார் தரம் சன்சத் மாநாடு)  மீது வழக்கு பதிவு செய்ய அதிகாரிகளிடையே நிறைய தயக்கம் இருக்கிறது” -என்று குறிப் பிட்ட பாலி நாரிமன், வெறுப்பூட்டும் பேச்சுக் களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கும் வகையில் நாடாளுமன்றம் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். “வெறுப்பு பேச்சு அரசியல் சட்டத்திற்கு  எதிரானது” என்று குடியரசுத் துணைத்தலை வர் வெங்கையா நாயுடு திருவனந்தபுரத்தில் பேசியதைக் குறிப்பிட்டு, “சற்று தாமதமாக வாவது, நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் தனது உரையில் ‘வெறுப்பூட்டும் பேச்சு அரசியலமைப்பிற்கு முரணானது, அது அர சியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்ல, அது ஒரு குற்றச் செயலாகும். இது ஐசிபி 153ஹ,  505(சி) பிரிவுகளின் கீழ் குற்றமாகும்’ என்று கூறியது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்த நாரிமன்,  “துரதிர்ஷ்டவசமாக, நடைமுறையில், ஒரு நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என்றாலும், இது  உண்மையில் நடக்காது, ஏனெனில் குறைந்த பட்ச தண்டனை என்பது சட்டத்தில் பரிந்து ரைக்கப்படவில்லை. நமது அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த உண்மையிலேயே விரும்பினால், குறைந்த பட்ச தண்டனைகளை வழங்குவதற்காக நாடாளுமன்றம் இந்த சட்டங்களை திருத்த வேண்டும் என்று நான் வலிமையாக பரிந்துரைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.