திருவனந்தபுரம், மார்ச் 26- கேரளாவில் காசநோய் தடுப்புக் கான சாதனைகளுக்காக ஒன்றிய அரசின் விருது ஒன்றிய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்பட உள்ளது. முன்னேற்றத்தை நோக்கிய துணை தேசிய சான்றி தழ் (காசநோய் இல்லாத நிலை), காசநோய் மதிப்பீட்டு சோதனையில் (Sub National certification of progress towards T¡õ free status) வெள்ளி பிரிவில் மாநிலம் விருதை யும் வென்றது. 2015 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் காசநோ யின் தாக்கத்தை 40 சதவிகிதம் அளவுக்குமேல் குறைத்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. வெள்ளிப் பிரிவில் வெற்றி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா மட்டுமே உள்ளது. இந்த விருது ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரம் கொண்டது. உலக காசநோய் தினத்தையொட்டி தில்லியில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். மேலும், காசநோயைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளுக்காக மாவட்டங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக தங்கப் பிரிவில் விருது பெற்றன.
வெள்ளிப் பிரிவில் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்ட யம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களும், வெண்கலப் பிரிவில் எர்ணாகுளம், கண்ணூர் மாவட்டங்களும் விருது பெற்றன. காசநோய் தடுப்புத் துறையில் மாநிலத்தின் சிறப்பான பணிக ளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக கேரள சுகாதா ரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கோவிட் சூழ்நிலையி லும் காசநோயாளிகளைக் கண்ட றிய அக்ஷய கேரளா திட்டம் தீவிர மாக செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காசநோயா ளிகள் கண்டறியப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் புதிய காசநோயால் பாதிக்கப்பட்டவர்க ளில் நான்கில் ஒரு பங்கு இந்தி யாவில்தான் உள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களை விட கேரளா வில் காசநோய் பாதிப்பு மிகக் குறைவு. 2025ஆம் ஆண்டுக் குள் காசநோய் இல்லாத மாநில மாக மாற்ற இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது என்றார். தற்போதுள்ள மருத்துவப் பதிவுகள் மற்றும் பதிவேடுகளின் மதிப்பாய்வு மற்றும் ஆவணமற்ற காசநோயாளிகள் யாராவது இருக்கி றார்களா என்பதைத் தீர்மானிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கிளஸ்டர்க ளின் சமூக ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருது வழங் கப்படுகிறது. இதுதவிர, காசநோய்க் கான மருந்துகள் காசநோய் ஒழிப்பு திட்டம் தவிர கேரளாவில் விநியோகிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றின் அடிப்படையில் கேரளாவுக்கு விருது கிடைத்தது. கடந்த ஆண்டு வெண்கலப் பிரிவில் மாநிலம் விருது பெற்றது.