states

img

திரிபுரா, நாகாலாந்து பாஜக அணி வெற்றி மேகாலயாவில் தொங்கு சட்டமன்றம்

புதுதில்லி, மார்ச் 2- சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில முடிவுகள் வெளியான நிலையில், திரி புரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  மேகாலயா மாநிலத்தில் எந்தவொரு கூட்ட ணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இங்கு போட்டியிட்ட பாஜக நான்காவது இடத்  திற்குத் தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகா லயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறி விப்பு வெளியிட்டது. 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரே கட்டமாகவும், இதே போல் தலா 60 தொகுதிகளைக் கொண்ட நாகா லாந்து, மேகாலயா மாநிலங்களில் ஓரிடம் தவிர்த்து தலா 59 இடங்களுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதியும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.  

முன்பு திரிபுராவில் தனிப்பெரும்பான்மை யுடனும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன் னணி (NPF) கட்சி, மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (NPP) ஆகியவற்றோடு கூட்டணி சேர்ந்தும் பாஜக ஆட்சி நடத்தி வந்தது. அந்த  வகையில், தேர்தல் நடைபெற்ற இம்மூன்று மாநிலங்களிலுமே பாஜக மீண்டும் ஆட்சி யைத் தக்கவைக்குமா? என்ற கேள்வி எழுந்தி ருந்தது. இந்த மாநிலங்களில் இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெறும்  சிறுவெற்றியும் கூட பாஜக-வுக்கு பின்னடை வாக அமையும் என்பது அரசியல் வல்லுநர் களின் கணிப்பாக அமைந்தது. இந்நிலையில்தான், மேகாலயாவில் பாஜக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி சேர்ந்துள்ள என்டிபிபி கட்சி அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது. திரிபுராவில் பாஜக - ஐபிஎப்டி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில் பதி வான வாக்குகளின் எண்ணிக்கை வியாழ னன்று (மார்ச் 2) காலை 8 மணிக்குத் துவங்கி யது.

மேகாலயா

இதில், மேகாலயாவில் தேர்தல் நடை பெற்ற 59 இடங்களில், கான்ராட் சங்மா தலை மையிலான ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP) 25 இடங்களைக் கைப்பற்றி, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களையும், காங்கிரஸ் 5  இடங்களையும் வென்றுள்ளன. முன்பு ஆளும்  கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக-வுக்கு தற்போது நான்காவது இடமே கிடைத் துள்ளது. 59 இடங்களில் போட்டியிட்ட பாஜக  சார்பில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ள னர். இந்த 3 இடங்கள் தவிர, அகுலுடோ சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேகாஷி சுமி தனது வேட்புமனுவை திடீரென வாபஸ் பெற்று கொண்டதால், இங்கு பாஜக வைச் சேர்ந்த கஸெடோ கினிமி என்பவர்  ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தார்.

இந்த நான்கு பிரதான கட்சிகளைத் தாண்டி,  ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11, மக்களின் குரல்  கட்சி 4, மலையக மக்கள் ஜனநாயக கட்சி 2,  மக்கள் ஜனநாயக முன்னணி 2, சுயேட்சைகள் 2 என மற்றவர்கள் 21 இடங்களைப் பெற் றுள்ளனர்.  இதன்படி மேகாலயாவில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கவில்லை. சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவைப் பெறும் கட்சியால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் எந்தவொரு கட்சி யும் தெளிவான பெரும்பான்மையை பெற முடி யாமல் போனதற்கு மம்தா பானர்ஜியின் திரி ணாமுல் காங்கிரஸ் காரணமாகி உள்ளது. 25 இடங்களைப் பெற்ற என்பிபி கட்சி சுமார்  32 சதவிகித வாக்குகளையும், எதிர்க்கட்சி யான காங்கிரஸ் சுமார் 13 சதவிகித வாக்கு களையும் பெற்றுள்ள நிலையில், 5 இடங் களை மட்டுமே பெற்றுள்ள திரிணாமுல் காங்கி ரஸ் சுமார் 14 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்  ளது. இது, காங்கிரஸ், என்பிபி ஆகிய 2 கட்சி களின் வெற்றியையும் பாதித்துள்ளது. திரிணா முல் காங்கிரஸ் பெற்ற 14 சதவிகித வாக்கு களும் காங்கிரசின் வாக்குகள் ஆகும். தேர்த லுக்கு முன்னதாக முகுல் சங்மா என்ற காங்கி ரஸ் தலைவர் தலைமையில் 12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை திரிணாமுல் காங்கிரஸ் தன்பக்கம் இழுத்தது. அவர்கள் மூலமே தற் போது 14 சதவிகித வாக்குகளைப் பெற்று காங்கிரசைத் தோற்கடித்துள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்தில் தேர்தல் நடைபெற்ற 60 தொகுதிகளில் தேசியவாத ஜனநாயக முற்  போக்கு கட்சி (NDPP) 24 இடங்களைப் பெற்  றுள்ளது. பாஜக-வுக்கு 12 இடங்கள் கிடைத்  துள்ளன. இவை தவிர பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), இந்திய குடியரசுக் கட்சி (அத் வாலே) ஆகியவற்றுக்கும் முறையே 3, 2 என்ற எண்ணிக்கையில் இடங்கள் கிடைத்துள்ளன.  இவை தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 7, தேசிய மக்கள் கட்சிக்கு (NPP) 5,  நாகா மக்கள் முன்னணிக்கு (NPF) 2, ஐக்கிய ஜனதாதளத்திற்கு ஒன்று, சுயேட்சைகளுக்கு 4 என்ற எண்ணிக்கையில் இடங்கள் கிடைத் துள்ளன. இதனால், நாகாலாந்து மாநிலத்தில் என்டி பிபி தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி யமைப்பது உறுதியாகி இருக்கிறது. நாகாலாந்தில் 2018 தேர்தலில் நாகா மக்கள் முன்னணி (NPF) தனிப்பெரும் கட்சியாக வந்தது. எனினும், தனது ஆதரவை வழங்கி, தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியை (NDPP), பாஜக அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. தற்போது 2023 தேர்தலில் என்டிடிபி கட்சியே தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.  இதனால், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி யமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிபுரா

திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடை பெற்ற 60 இடங்களில் ஆளும் பாஜக 32 இடங்கள், பாஜக-வின் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) ஓரிடம் என மொத்தம் 33 இடங்களைக் கைப் பற்றி ஆட்சியைத் தக்க வைத்துள்ளன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்களே கிடைத்துள்ளன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11  இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன. முன்னர் காங்கிரசில் இருந்த வரும், திரிபுரா மன்னர் வாரிசுமான பிரத் யோத் பிக்ரம் மாணிக்ய தேபர்மா துவங்கிய ‘திப்ரா மோதா கட்சி’ இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரித்து பாஜக-வின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. ‘திப்ரா மோதா கட்சி’ மட்டும் தனியாக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிபுராவில் பாஜக கூட்டணி சுமார் 40  சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள நிலை யில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சுமார் 35 சதவிகித வாக்குகளைப் பெற்றுள் ளன. அதேநேரத்தில் 42 தொகுதிகளில் போட்டி யிட்ட மாணிக்ய தேபர்மாவின் ‘திப்ரா மோதா  கட்சி’ மட்டும் சுமார் 20 சதவிகித வாக்கு களைப் பெற்றுள்ளது.

4 மாநிலங்களில் இடைத்தேர்தல்

3 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்த லோடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்  கண்ட், தமிழ்நாடு, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருந்த 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்  தேர்தலும் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் 3, பாஜக 2, ஏஜெஎஸ்யு கட்சி 1 என வெற்றி பெற்றுள்ளன. இதில், மேற்குவங்க மாநிலம் சாகர்திகி தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பைரோன் பிஸ்வாஸ், அடுத்து வந்த திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் தேபாஷிஷ் பானர்ஜி யை 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகாராஷ்டிர மாநிலத்தில் கஸ்பா, சிஞ்ச்வாட் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், கஸ்பாவில் காங்கிரஸ் கட்சியும், சிஞ்ச்வாட் டில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் தொகுதி யில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம்  எனப்படும் ஏஜெஎஸ்யு (AJSU), அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரை 21 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அருணாசலப்பிரதேச மாநிலம் லும்லா  தொகுதியில் பாஜக வேட்பாளர் மேரல்போர்ன் சையம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தால், இங்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசி யம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி யில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

திரிபுராவில் மேலும் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

அகர்தலா, மார்ச் 2- திரிபுராவில் மாலை 6 மணி நிலவரப்படி 80% வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றா லும் பாஜக குண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு  இடங்களில் வன்முறைக்கான சூழலை ஏற்படுத்தினர்.  வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்னரே பாஜக குண்டர்கள் வன்முறையை கையிலெடுத்து தாக்குதல் நடத்தினர். கோவாய் காவல் நிலை யத்திற்குட்பட்ட தந்திபாரா பகுதியில் வசிக்கும் சதன் தந்தி என்ற சிபிஎம் ஊழி யரின் வீடு புகுந்து,”ஏன் பாஜகவிற்கு வாக்க ளிக்கவில்லை” என்று கூறி குடும்பத்தில் உள்ள 6 பேரை அடித்து உதைத்துள்ளனர். அருகில் உள்ள மற்ற சிபிஎம் ஊழியர்களின் வீடுகளிலும் தாக்குதலை நடத்த பாஜக குண்டர்கள் தயாரான பொழுது போலீசார் வந்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.  மாநிலத்தின் பெரும்பாலான இடங்க ளில் வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் பாஜக குண்டர்கள் வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபட தயாராக இருக்கும் நிலை யில், அடுத்த 2 நாட்களுக்கு 144 தடை நீடிக் கப்படுவதாக தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு  காவல்துறை அறிவித்துள்ளது.

27 வருட பாஜக கோட்டையை தகர்த்த காங்கிரஸ்

மும்பை, மார்ச் 2- மகாராஷ்டிர மாநிலத்தில் கஸ்பா பெத்,  சிஞ்ச்வாட் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், கஸ்பாவில் காங்கிரஸ் கட்சியும், சிஞ்ச்வாட் டில் பாஜக வெற்றி பெற்றுள்ளன. இதில்  கஸ்பா பெத் தொகுதி பாஜகவின் கோட்டை யாக உள்ளது. அங்கு 1995 முதல் 2022-ஆம் ஆண்ட வரை பாஜக கட்சியினரே எம்எல்ஏ-வாக உள்ள நிலையில், தற்போ தைய சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர தங்கேகர் 10,915 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று 27 வருட பாஜக கோட்டையை தகர்த்துள்ளார்.