புதுதில்லி, ஜன.4- இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவருமான முகேஷ் அம்பானிக்கு, 2022-ஆம் ஆண்டின் துவக்கமே சிறப்பாக அமைந்துள்ளது. புத்தாண்டின் முதல் வர்த்தக நாளில் மட்டும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாயை, அவர் வருவாயாக ஈட்டி யுள்ளார். 2022-ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளில் (ஜனவரி 3) ‘ரிலை யன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்’ பங்குகள் மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்துள் ளன. அவற்றின் நிகர மதிப்பு 1.49 பில்லியன் டாலர்- அதாவது சுமார் ரூ.11 ஆயிரத்து 99 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, முகேஷ் அம்பானி யின் நிகர மதிப்பு கடந்த திங்களன்று 1.49 பில்லியன் டாலர்கள் அதிகரித்து 91.5 பில்லியன் டாலர்களை எட்டி யுள்ளது.
இதன்மூலம் உலகப் பணக் காரர்கள் பட்டியலில் 12-ஆவது இடத்தையும், ஆசிய அளவில் முதல் இடத்தையும் அம்பானி பிடித்துள் ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 13 பில்லியன் டாலர் மட்டுமே அதி கரித்தது. அதானி குழுமத்தின் தலை வர் கவுதம் அதானி மற்றும் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆகியோர் வருவாய் அடிப்படையில் அம்பானி யை விட முன்னிலையில் இருந்த னர். 2021-ஆம் ஆண்டில் அதானியின் நிகர சொத்து மதிப்பு 41.5 பில்லியன் டாலரும், பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 15.8 பில்லியன் டாலரும் அதிக ரித்தது. அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலர்களை எட்டி யது.
பங்குச் சந்தையில் பட்டியலி டப்பட்ட அதானியின் பல நிறுவ னங்கள் உறுதியான வருமானத்தைக் கொடுத்தன. குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரை சஸ் பங்குகள் 2021-ஆம் ஆண்டில் 245 சதவிகிதம் உயர்ந்தது. அதே போல், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு கள் 288 சதவிகிதமும், அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 351.42 சத விகிதமும் உயர்ந்தன. ஆனால், 2022-ஆம் ஆண்டின் துவக்கம் முகேஷ் அம்பானிக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதுமே 13 பில்லி யன் டாலர் அளவிற்கே அவரது சொத்து மதிப்பு அதிகரித்தது. ஆனால், தற்போது புத்தாண்டின் முதல் வர்த்தக நாளில் மட்டும் 1.49 பில்லியன் டாலர் அளவிற்கு அம்பானி வாரிக் குவித்துள்ளார்.