states

img

ஒரு மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைக்க எதை வேண்டுமானாலும் பரப்புவதா?

புதுதில்லி, மே 8 - தமிழ்நாட்டில் வட இந்தியத் தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கில், யூடியூபர் மணீஷ் காஷ்யப்பிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள், குறிப்பாக பீகார் மாநிலத்தவர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கப்படுவதாக கடந்த மார்ச் மாதத்தில் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.  தொழிலாளர்கள் அடித்து துன்புறுத்தப்படுவது போல சில  வீடியோ காட்சிகளும் பதிவேற்றப் பட்டன. இது நாடு முழுவதும் சர்ச்சை யாக மாறியது. இடம்பெயர் தொழி லாளர்களின் குடும்பத்தினர் அச்சத்திற்கு உள்ளாகினர். இது மாநிலங்கள் இடையிலான மோதலாக மாறும் அபாயமும் ஏற்பட்டது. ஆனால், சமூகவலைதளங்களில் பரப்பப்பட்ட செய்தி மொத்தமும் வதந்தி; வீடியோக்கள் அனைத்தும் போலி, வழக்கம்போல இந்த மோசடி  வேலையைச் செய்தவர்கள் பாஜக- வினர்தான் என்பது வெகுவிரை வாகவே வெளிச்சத்திற்கு வந்தது. தமிழ்நாடு தொடர்பாக வதந்தி பரப்பிய தாக அமன்குமார், ராகேஷ் திவாரி, யுவ ராஜ்சிங் ராஜ்புத், மணீஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன. குறிப்பாக, மணீஷ் காஷ்யப் மீது மட்டும் தமிழ்நாட்டில் 6 வழக்குகளும், பீகார் மாநிலத்தில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் ‘யூடியூபர்’ மணீஷ் காஷ்யப், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தம் மீது தேசிய  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரியும் தம் மீதான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தர விடக் கோரியும், மணீஷ் காஷ்யப் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்கிறது; அவ்வாறிருக்கையில் மாநி லத்தின் அமைதியை சீர்குலைக்க எதை வேண்டுமானாலும் பரப்பிவிடு வதா?” என மணீஷ் காஷ்யப்பிற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  “நாளேடுகளில் வந்த செய்தி களின் அடிப்படையிலேயே மணீஷ்  காஷ்யப் வீடியோக்களை வெளியிட்ட தாக அவரது தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் பீகார் அரசு இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. மணீஷ் காஷ்யப் மீது ஏற்கெனவே மிரட்டிப் பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதை பீகார் அரசு சுட்டிக்காட்டியது.  இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அமைதியை சீர்குலைக் கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க முடியாது என்று கூறி, தேசிய  பாதுகாப்புச் சட்டத்தின் கீழான நட வடிக்கையை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.