states

வேளாங்கண்ணி கடலில் குளித்த மானாமதுரை சிறுமிகள் மூவர் பலி

வேளாங்கண்ணி, ஜூலை 9- வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமி கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.  நாகப்பட்டினம் மாவட்  டத்தில் உள்ள முக்கிய சுற் றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு விடு முறை தினத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரு வது வழக்கம். சனிக்கிழமை காலை சிவகங்கை மாவட்  டம் மானாமதுரை ராஜகம்பீ ரம் என்ற ஊரில் இருந்து 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர்.  வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கிய அவர்கள் பின்னர் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர். இதில் ஆரோக்கிய ஷெரின் (19), ரியானா (13), சஹானா (14) ஆகிய மூவரும் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற் படி மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108  ஆம்புலன்ஸ் மூலம் நாகப் பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ தனை செய்த மருத்துவர் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுமிகளின் உடலை கைப்  பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று பேர்  கடல் அலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப் பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.