states

img

சாமியார் பஜ்ரங் முனி தாஸ் 11 நாட்களுக்குப் பிறகு கைது!

லக்னோ, ஏப். 15 - முஸ்லிம் பெண்களை பொது இடத்தில் பாலியல் வல்லு றவு செய்வேன் என்று மிரட்டிய  சாமியார் பஜ்ரங் முனி தாஸ், 11 நாட்களுக்குப் பிறகு,  ஒருவழியாக கைது செய்யப் பட்டுள்ளார். உ.பி. மாநிலம் சீதாபூரில் மகரிஷி ஸ்ரீலஷ்மண் தாஸ் உதாசி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள் ளார். இவர் கடந்த ஏப்ரல் 2 அன்று  சீதாபூரில் நடைபெற்ற ஆன்மீக  ஊர்வலத்தில் ஏகே-47 துப்பாக்கி கள் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் வாகனத்தில் வலம் வந்தார். அப்போது, கைராபாத் பகுதி மசூதி முன்பு, வாகனத்தில் அமர்ந்தபடியே பேசிய பஜ்ரங் முனி தாஸ், ‘‘கைராபாத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் கேலி செய்யப்பட்டால் கூட, இங்குள்ள முஸ்லிம் மரு மகள்களை அவர்கள் வீட்டி லிருந்து வெளியே இழுத்துவந்து,

பொது இடத்தில் பாலியல் வல்லு றவு செய்வேன்’’ என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான வீடியோ  காட்சிகள் சமூக வலைதளங் களில் வெளியாகி, நாடு முழுவதும் கடும் கண்டனத்திற்கு உள்ளா னது. எனினும், 6 நாட்களுக்குப் பிறகு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதிய பிறகே, சாமியார் பஜ்ரங் முனி தாஸ் மீது உ.பி. பாஜக அரசு வழக்கு பதிவு செய்தது. அப் போதும்கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.  தற்போது 11 நாட்களுக்குப் பிறகு, சாவகாசமாய் வியாழ னன்று இரவு சாமியார் பஜ்ரங் முனி தாஸை. உபி. காவல்துறை கைது செய்துள்ளது. இதனிடையே “எனது பேச்சு தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்” என்று சாமியார் பஜ்ரங் முனி தாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.