புதுதில்லி, ஜூன் 10 - இந்துக்கள் அனைவரும் கட்டாய மாக வாள் அல்லது துப்பாக்கி வைத்தி ருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத வர்கள் இந்துக்களாகவே இருக்கத் தகுதியில்லை என்று யுவராஜ் என்ற உ.பி. மடாதிபதி கொலைவெறியைத் தூண்டி பேசியுள்ளார். உ.பி. மாநிலம் மதுராவிலுள்ள பிரிஜ் தாம் எனும் மடத்தின் தலைவராக இருப்பவர்தான் சாமியார் யுவராஜ் மஹராஜ். இவர், இந்து சேனா என்ற இந்துத்துவா அமைப்பின் தலைவ ராகவும் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், யுவராஜ் பேசிய ஒரு வீடியோ வட மாநில சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், “இந்துக்கள் அனைவரும் தம்முடன் துப்பாக்கி அல்லது வாள் வைத்திருக்க வேண்டும். இதை வைத்தி ருக்காதவர்களை நான் ஒரு இந்துவா கவே கருத மாட்டேன். இதுபோன்ற இந்துக்களை நான் உதைக்கப் போகி றேன். அவர்கள் இந்து மதத்தில் இருக் கவே கூடாது” என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, “தேவைப்படு வோர் வாள்களை என்னிடமிருந்து விலைக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் விலை ரூ. 1,250 ஆகும். பட்டி யல் வகுப்பினருக்கு சலுகை அடிப் படையில் ரூ. 800 என்ற விலைக்கு வழங் கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார். வீடியோவில் சாமியார் யுவராஜின் உருவம் தெளிவாக இல்லாத நிலை யில், பேசியது அவர்தானா? என்பதை உறுதிசெய்ய, சில செய்தியாளர்கள் சாமியாரை நேரில் சென்று சந்தித்துள்ள னர். அப்போது, அவர்களிடம் அந்த வீடியோவில் இருப்பது தாம்தான் என உறுதிப்படுத்திய சாமியார் யுவ ராஜ், “இதற்காக தன்னை கைது செய்ய எவருக்கும் துணிவு கிடையாது” என்றும் இறுமாப்பை வெளிப்படுத்தி யுள்ளார். இந்த சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பிய நிலையில், மதுரா காவல்துறை விசா ரணை நடத்தப்படும் என்று அறிவித் துள்ளது. விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டால் அதன் மீது யாராக இருப்பினும் நட வடிக்கை எடுக்க இருப்பதாகவும் மாவட்ட எஸ்.எஸ்.பி.யான டிரைகன் பைஸன் தெரிவித்துள்ளார். சாமியார் யுவராஜ், கடந்த டிசம்பர் மாதம், தில்லியின் விவேக் விஹார் பகுதியில் 40 வாள்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போதும், அவர், “மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் இடத்தில் கட்டப்பட்டுள்ள ஷாயி ஈத்கா மசூதி மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பவருக்கு இந்த வாள்கள் விற்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார், என்பது குறிப்பி டத்தக்கது.