states

24 மணி நேரத்தில் 15 முறை புத்தாண்டு கொண்டாடியவர்கள்

புதுதில்லி, ஜன.4-  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள  பத்துப் பேர், 24 மணி நேரத்துக் குள் 15 முறை புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’  விண்வெளி ஆய்வு மையம், ரஷ்யா,சீனா உள்ளி ட்டவை சார்பில், விண்வெளி யில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.  இங்கு 10 விண்வெளி வீரர்கள் உள்ளனர். டிசம்பர் 31-ஆம் தேதி இரவில் உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் காத்திருந்தனர்.  அதுபோலவே இந்த வீரர்களும் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்திய நேரப்படி 31-ஆம் தேதி இரவு 6:14 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் மார்ஷல் தீவுகள் பகுதியை விண்வெளி ஆய்வு மையம் கடந்தபோது, அதில் இருந்த வீரர்கள் முதல் முறையாக புத்தாண்டை வரவேற்றனர். அதன்பின் இந்த விண்வெளி மையம் பூமியின், ஒவ்வொரு பகுதியையும் கடக்கும்போது, நேர மண்ட லம் மாற்றம் அடையும் போது, அதில் இருந்த விண்வெளி வீரர்கள் புத்தா ண்டை வரவேற்றுள்ளனர். மேலும் இந்த பத்துப் பேரும் தங்களது நாட்டுக்கு மேலே விண்வெளி மையம் சென்றபோதும், புத்தா ண்டைக் கொண்டாடினர். இப்படி 24 மணி நேரத்தில், 15 முறை இவர்கள் புத்தாண் டைக் கொண்டாடினர்.  இவர்களைத் தவிர விண்வெளியில் சீனா அமைத்து வரும் ஆய்வு மையத்தில் உள்ள மூன்று வீரர்களும் கொரோனா இல்லா உலகில் புத்தா ண்டைக் கொண்டாடினர்.