states

img

பல்கலைக்கழகம் கட்டினால் சிறை... விவசாயிகளை கொன்றால் விடுதலை!

அகிலேஷ்  கடும் சாடல்

லக்னோ, பிப்.12- உத்தரப் பிரதேசத்தில் முதற்கட் டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் பாக்கியுள்ள 6 கட்டங்களுக்கான பிரச்சாரம் தீவிர மாக நடைபெற்று வருகிறது. மேற்கு உத்தரப்பிரதேசம் உட்பட்ட 11 மாவட்டங்களில் நடை பெற்ற முதற்கட்டத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி முன்னிலை பெறும் என்று தகவல்கள் வெளியாகி வரு வது, அக்கட்சியின் தலைவர் அகி லேஷை உற்சாகத்தில் ஆழ்த்தியுள் ளது. இதையடுத்து அவர் தனது பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தி யுள்ளார். வெள்ளிக்கிழமையன்று ராம்பூர் மாவட்டம் சுயர் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதா வது: ராம்பூரைச் சேர்ந்த அசம் கானின் மகன் அப்துல்லா அசம், பொய் வழக்கில் 2 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். இதேபோல், அசம் கான் மீதும் எருமை மாடு திருட்டு, கோழி திருட்டு, புத்தகங்கள் திருட்டு என பொய் வழக்குகளைப் போட்டு, அவரை ஆதித்யநாத் அரசு சிறைக்கு அனுப்பியது.  அசம் கான், ராம்பூரில் பல்க லைக் கழகத்தை கட்டினார். பல்க லைக் கழகம் கட்டிய அசம் கான் சிறையில் இருக்கும் போது, விவ சாயிகளை காரை ஏற்றி நசுக்கி கொன்றவர் (ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா) சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதுதான்  காவி கட்சியின் ‘புதிய இந்தியா’ வாக இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, நமது மாநிலத்தில் இருந்து பாஜக அழிக்கப்படும் என்ப தற்கான அறிகுறிகளை கொடுத் துள்ளது. பாஜக 700 குத்துச்சண்டை கள் செய்தாலும், பாஜக-வை விவ சாயிகள் மன்னிக்க மாட்டார்கள்.  இவ்வாறு அகிலேஷ் பேசியுள் ளார்.