புதுதில்லி, மார்ச் 9- ஒன்றிய அரசின் 2021-22 நிதியாண் டிற்கான பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்பட்ட 93 ஆயிரம் கோடி ரூபா யில், சுமார் ரூ. 36 ஆயிரத்து 500 கோடி யை மோடி அரசு செலவிடவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளி யாகியுள்ளது. நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6.7 சதவீதம் வரை நிதி ஒதுக் கப்படுகிறது. இந்தியாவிலும் அதே அளவுக்கு நிதி ஒதுக்கி கல்வித்துறை யை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்கள் மற்றும் மாணவர் சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கை யாக உள்ளது. ஆனால், கல்விக்காக இந்திய அரசு, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 3 சதவிகி தத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்து வரு கிறது. கடந்த 2021-22 பட்ஜெட்டை எடுத்துக் கொண்டால், கல்வித்துறைக்கு ரூ. 93 ஆயிரத்து 224 கோடியை மட்டுமே ஒதுக்கியது. இது மிகக் குறைவான ஒதுக்கீடு என்று கல்வியாளர்கள், மாண வர்கள் கூறினர். ஆனால், இவ்வளவு குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியிலும், கடந்த 2022 ஜனவரி மாத நிலவரப்படி, ரூ.56 ஆயிரத்து 567 கோடியை மட் டுமே கல்விப்பணிகளுக்காக ஒன்றிய அரசு செலவிட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
மோடி அரசு சுமார் ரூ.36 ஆயிரத்து 657 கோடியை பயன் படுத்தப்படாமல் விட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் உதவிபெறும் கல்வி மையங்களில் மட்டும் ரூ.7 ஆயி ரத்து 143 கோடி நிதி பயன்படுத்தப்படா மல் விடப்பட்டுள்ளது.
இதற்கு முந் தைய 2019-20 நிதியாண்டில் இவ்வாறு செலவழிக்கப்படாத தொகை ரூ. 355 கோடியாகவும், 2020-21 நிதியாண்டில் ரூ.274 கோடியாகவும் இருந்தது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில், 2021-22 நிதியாண்டிற்கு ஒதுக்கியதில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான நிதியை மோடி அரசு செலவிடாமல் அலட்சியம் காட்டியுள்ளது. மொத்தமுள்ள 46 மத்தியப் பல்க லைக்கழகங்களில் 19 ஆயிரத்து 349 அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் காலி யிடங்கள் உள்ளன. இதில் 6 ஆயி ரத்து 535 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
தில்லி பல்கலைக் கழகத்தில் மட்டும் 859 இடங்கள் காலி யாக உள்ளன. அலகாபாத் பல்க லைக்கழகத்தில் 611 பேராசிரியர் பணி யிடங்களும், பனாரஸ் இந்து பல்க லைக்கழகத்தில் 499 இடங்களும், அலி கர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 359 பணியிடங்களும் காலியாக உள்ளன. தரமான கல்வி வழங்க தரமான ஆசிரியர்கள் அவசியம் என்று வலி யுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒதுக் கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும், மறுபுறம் ஆசிரியர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் கவலையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக்காக ஒதுக்கிய நிதியைக் கூட செலவிடாத மோடி அரசுதான், கல்வி யின் மீது ஏதோ மிகுந்த அக்கறை இருப்பது போல காட்டிக் கொள்வ தற்காக, மக்களிடம் ‘செஸ்’ வரியையும் தனியாக வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.