states

img

இது வேண்டுகோள் அல்ல; எச்சரிக்கை என மிரட்டல் இந்துக்கள் அல்லாதவர்கள் வாரணாசிக்குள் நுழையக் கூடாது!

வாரணாசி, ஜன. 8 - இந்துக்கள் அல்லாதவர்கள் நகரு க்குள் நுழையக் கூடாது என்று வார ணாசி முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி,  இந்துத்துவா அமைப்புக்களைச் சேர்ந்த வர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் வார ணாசி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியாகும். இங்குதான் இந்து புனிதத் தலங்களின் ஒன்றான காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. அண்மை யில் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் ரூ. 339 கோடியில் காசியிலுள்ள கோயில் கள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு, விஸ்வநாதர் ஆலயம் மற்றும் கங்கைக் கரைப் பகுதிகள் அழகுபடுத்தப்பட்டன. இந்நிலையில், “வாரணாசியில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்  கூடாது” என்று எச்சரிக்கை சுவரொட்டி கள் ஒட்டப்பட்டு, பேனர்களும் வைக்கப் பட்டுள்ளன.  “காசியில் கங்கை நதியின் கரைகள் மற்றும் கோவில்கள் சனாதன தர்மம்,  

இந்திய கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை களின் அடையாளம். இது ஒன்றும் சுற்றுலாத்தலம் அல்ல. சனாதன தர்மம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இங்கு வரவேற்கப்படுகின்றனர். இந்து மதத்தினர் அல்லாதோருக்கு அனுமதி இல்லை. சனாதன தர்மத்துக்கு மரியாதை தராதவர்கள் கங்கையில் புனித நீராடக் கூடாது, வாரணாசி கோயி லை பார்வையிடக் கூடாது. இது வேண்டு கோள் அல்ல, எச்சரிக்கை!” என்று கூறி யுள்ளனர். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களே இந்த மதவெறி விஷமத்தை செய்தி ருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்துள்ள உ.பி. பாஜக அரசின் காவல்துறை, சம்பந்தப் பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.