லக்னோ, ஏப்.18- உ.பி. மாநிலத்தில், மசூதி நிர் வாகத்தை மிரட்டி, அங்கிருந்த ஒலிபெருக்கியை, சங்-பரிவார் கூட்டத்தினர் அகற்றச் செய்த சம் பவம் நடந்துள்ளது. ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தியைக் காரணமாக வைத்து, சங்-பரிவார் அமைப்பினர் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த வகை யில், உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோவர்தன் நக ரிலுள்ள மசூதி முன்பு ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்த வர்கள் திரண்டு அனுமன் துதி பாடி வெறிக்கூச்சல் போட்டனர். மசூதியில் உள்ள ஒலிபெருக்கி மூலம் நாளொன்றுக்கு ஐந்து முறை பாங்கு (தொழுகைக்கான அழைப்பு) ஒலிப்பது வழக்கம். இந் நிலையில், இங்கு பாங்கு ஒலிக் கப்படவே கூடாது என்று ஹிந்து வாஹினியினர் மிரட்டல் விடுத்த னர். மசூதியில் ஒலிபெருக்கியை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு உள்ளதை யும், மத நல்லிணக்கத்திற்கு உறு விளைவிக்கும் எண்ணம் எங்க ளுக்கு ஒருபோதும் இல்லை என்று மசூதி நிர்வாகத்தினர் விளக்கம் அளித்ததையும் சங்-பரிவார் ஏற்ப தாக இல்லை. ஒருகட்டத்தில், அசாதாரண சூழல் உருவாவதை உணர்ந்த மசூதி நிர்வாகத்தினர், அவர்களா கவே, தங்கள் மசூதியில் இருந்த ஒலிபெருக்கியை தற்போது அகற்றியுள்ளனர்.