states

வீரர்கள் கொலை?

அட்டிஸ் அபாபா, ஜூலை 1- தங்கள் பிடியில் இருந்த சூடான் ராணுவ வீரர்களைக் கொலை செய்யவில்லை என்று எத்தியோப்பிய ராணுவம் கூறியுள்ளது.  சில நாட்களுக்கு முன்பாக சூடான் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஏழு  ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு சாதாரண குடிமகன் ஆகியோர் எத்தியோப்பிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்  என்று குற்றம் சாட்டியிருந்தது. இதற்குப் பதிலளித்த எத்தியோப்பிய ராணுவம், படுகொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கு அருகில் தங்கள் படைவீரர்கள் இல்லை என்று சொன்னதோடு, தங்கள் வசம் இருக்கும் ராணுவ வீரர்களைக் கொலை  செய்யும் வழக்கம் இல்லை என்றும் கூறியுள்ளது. பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை வீசி வரும் நிலையில் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.