புதுதில்லி,பிப்.4- சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.81 ஆயிரம் கோடி வரு வாய் கிடைத்துள்ளதாகவும் சுங்கச்சாவ டிகளில் கட்டணத்தை குறைக்க எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்பட வில்லை என்று ஒன்றிய சாலை போக்கு வரத்து- நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். இந்தியாவில் 10 ஆண்டுகளாக பயன் பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தை குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய சாலை போக்கு வரத்து-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கை யில், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ள வில்லை. கடந்த 3 ஆண்டுகளில் சுங்கச் சாவடிகள் மூலம் ரூ.81 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.