states

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

வாரணாசி, அக்.14 -  உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வமான ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் - வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப், அங்கு மசூதி  கட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் சிங்காரக் கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்று 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடுத்திருந்தனர். மசூதியில் நடத்தி முடிக்கப்பட்ட கள ஆய்வில், அங்கு சிவலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், ஓசுகானாவை சீல் வைக்க வாராணாசி சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த மாதம் இந்துப் பெண்கள் ஐவரும் கியான்வாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தை கார்பன் டேட்டிங் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்று கோரினர். மசூதிக்குள் இந்துக் கடவுளரின் மேலும் பல சிலைகள் இருப்பதாகவும் கூறினார்கள்.  இந்நிலையில், இந்த மனு வை வாரணாசி நீதிமன்றம் தடை செய்துள் ளது. அத்துடன், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல் பூர்வ ஆதாரமில்லை என்று கூறியுள்ளது.