புதுதில்லி, ஏப்.6- தன்னாட்சி அமைப்பான, இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் ஒன்றிய அரசு தலையீடு செய்ததை ‘அல் ஜசீரா’ (Al Jazeera) செய்தி நிறுவனம் வெளிக் கொண்டு வந்துள்ளது. ‘ரிப்போர்டர்ஸ் கலெக்டிவ்’ (Reporters Collective) என்னும் அமைப்பு ஆர்டிஐ மூலம் சேகரித்த தகவல்களைக் கொண்டு, இந்த சிறப்புப் புலனாய்வு கட்டுரையை ‘அல் ஜசீரா’ வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டுரையின்படி, 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ரிசர்வ் வங்கியின் மீது ஒன்றிய நிதியமைச்சக அதிகாரிகள் சிலர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதி கொள்கையில் மாற்றங்கள் செய்யாமல் இந்திய தொழில்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக மோடி அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவின் பணவீக்க நிலை குறைவாக இருந்த போதும் ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதி கொள்கையில் கடன் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவுகள் தொடர்பாக விசா ரிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் ஏற் படுத்தியுள்ளனர். “2014-ஆம் ஆண்டு இந்தியாவில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதிக் கொள்கை தொடர்பாக ஒரு புதிய அமைப்பை உருவாக்கத் திட்ட மிட்டார். அந்த அமைப்பு ரிசர்வ் வங்கியு டன் இணைந்து நிதிக் கொள்கையை நிர்ண யிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் ஒன்றிய நிதியமைச்சகம் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்பிறகு 2016-ஆம் ஆண்டு நிதிக் கொள்கை அமைப்பு ஒன்றும் உரு வாக்கப்பட்டது. அந்த அமைப்பில், ஒன்றிய அரசே 3 பேரை நியமித்து, தனது தலை யீட்டை வலுவாக்கியது. 2016ஆம் ஆண்டு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார். அவரும் ரிசர்வ் வங்கியின் முடிவுகளில் ஒன்றிய அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று 2017-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், ‘எங்களுடன் நீங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வில்லை. மேலும் நிதிக் கொள்கை குழு விலுள்ள ரிசர்வ் வங்கி மற்றும் பிற நபர்களி டம் தனித்தனியே கூட்டம் நடத்தியது தவறு. மேலும் இது ரிசர்வ் வங்கி சட்டத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தெரிவித்தார். அவரின் இந்தக் கடிதம் தொடர்பாக அப்போது பொருளாதார விவகாரங்க ளுக்கான செயலாளராக இருந்த சக்திகாந்த தாஸ் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். அதில் ஒன்றிய நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் நிதிக் கொள்கைக் குழு உறுப்பினர்களை சந்தித்தது எந்த வகையிலும் ரிசர்வ் வங்கி சட்டத்திற்கு இடையூறாக இருக்காது என்று கூறியிருந்தார். ஆனால், ஒன்றிய அரசின் தொடர் தலை யீடு காரணமாக 2018-ஆம் ஆண்டு உர்ஜித் படேல் தன்னுடைய சொந்த காரணங்க ளுக்காக அப்பதவியிலிருந்து விலகிய பின்னர், சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது” இவ்வாறு, ரிசர்வ் வங்கி செயல்பாடு களில், மோடி அரசின் தலையீடுகளை ‘அல் ஜீசீரா’ அம்பலப்படுத்தியுள்ளது.