states

கட்டுக்கட்டாக பணம், தங்கத்தை பதுக்கிய சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

புதுதில்லி,மே 5- பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2016ஆம் ஆண்டு  தொழிலதிபர் சேகர் ரெட்டி,  அவரது உறவினர், அவரது  ஆடிட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோத னை நடத்தினர். இதில் சேகர் ரெட்டி வீட்டி லிருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள்  கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 36  கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம்,  ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டன .  மோடி அரசு பணம் மதிப்பிழப்பு நட வடிக்கை மேற்கொண்டதில் மக்கள் அவதிப்பட்டு அலையும்போது இவரிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  விசாரணையில் அவர் வங்கி அதிகாரி களின் உதவியுடன் பழைய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கியதாக புகார் எழுந்தது.  இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது. சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.  ஆனால், இந்த வழக்கில் மேலும்  எந்தவொரு ஆதாரங்களும் சிக்காத நிலை யில், சிபிஐ வழக்கை முடித்துக்கொண்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  சேகர் ரெட்டி தரப்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தார். இந்த வழக்கின் பல கட்ட  விசாரணையைத்தொடர்ந்து,  இருதரப்பு வாதங்களும் முடிந்து., வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.  இந்த நிலையில் மே  5 அன்று உச்சநீதி மன்றம் சேகர் ரெட்டிக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.