states

“இந்தியா” கூட்டணி பெயருக்கு தடை இல்லை

புதுதில்லி, ஆக. 11 - எதிர்க்கட்சிகள் “இந்தியா” என கூட்டணி பெயர் வைக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள் ளது.  பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற காங்கிரஸ், இடது சாரிகள், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள்  ஒன்றி ணைந்து, “இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி”  (I.N.D.I.A - Indian National Developmental Inclusive Alliance) என்ற விரிவாக்கத்தை சுருக்கி “இந்தியா” என கூட்டணிக்கு பெயர் சூட்டின. இந்நிலையில்  “இந்தியா” பெயர் சுருக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு வெள்ளி யன்று விசாரித்தது. அப்போது, “விளம்பர நோக்கத்துக்காகவே இந்த வழக்கு  தொடரப்பட்டுள்ளதாக தெரிகிறது” என நீதிபதி எஸ்.கே.கவுல்  கூறினார். மேலும் இதுபோன்ற விஷயங்களுக்காக “மக்கள் நேரத்தை வீணடிப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது” என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற விரும்புவதாக மனுதாரர் தெரிவிக்கவே, அதற்கு அனுமதி அளித்த உச்சநீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  தில்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவை வழக்குகள் “இந்தியா” கூட்டணி பெயர் தொடர்பாக தில்லி உயர்நீதி  மன்றத்திலும் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த மனுக்கள் அக்டோபர் 31 அன்று விசார ணைக்கு வருகின்றன.