புதுதில்லி, ஏப்.26- அங்கன்வாடி பணியாளர்கள் மற் றும் உதவியாளர்கள் பணிக்கொடை பெற தகுதியானவர்கள் என வர லாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்களன்று (ஏப்.25) அளித் துள்ளது. குஜராத் அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங் கம் (சிஐடியு) நீண்ட சட்டப் போராட் டத்தில் வெற்றி பெற்றுள்ளது. நீதிபதி கள் அஜய் ரஸ்தோகி, அபய் கே ஓலா ஆகியோர் அடங்கிய அமர்வு, 10 சதவிகித வட்டியுடன் பணிக் கொடையை மூன்று மாதங்களுக் குள் வழங்க வேண்டும் என்று உத்தர விட்டது. குஜராத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7,800 ரூபாயும், உதவியாளர்களுக்கு 3,950 ரூபாயும் வழங்கப்படுவதாகவும், அவர்களின் அவலநிலையை போக்க ஒன் றிய, மாநில அரசுகள் காலம் கடத்துவதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது. பணிக்கொடை வழங்க ரூ.25 கோடிக்கு மேல் தேவை என வும், இது கூடுதல் சுமையாக இருக் கும் என்கிற ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசின் வாதத்தை உச்சநீதி மன்றம் ஏற்கவில்லை.
தொழிற்சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத், கே.ஆர்.சுபாஷ் சந்திரன் ஆகியோ ரும், தனிநபர் மனுக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரீக் ஆஜராகி வாதாடினர். பணிக்கொடை (கிராஜுவிட்டி) சட்டம் 1972, முதுமை அல்லது பிற காரணங்களால் வேலை செய்ய முடியாதவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குகிறது. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடி யாக அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய அங்கன்வாடி பணியா ளர்கள் மற்றும் உதவியாளர்கள் கூட்ட மைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
தீர்ப்பு விவரம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 11 ஆகியவற்றின் விதிகளின் படி, அங்கன்வாடி மையங்களும் சட்டப்பூர்வ கடமை களைச் செய்கின்றன என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்- 2013 மற்றும் குஜ ராத் அரசு வகுத்துள்ள விதிகள் ஆகிய வற்றின் அடிப்படையில் அங்கன் வாடி மையங்கள் அரசாங்கத்தின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக மாறியுள் ளன. அங்கன்வாடி பணியாளர்கள் (AWWs) மற்றும் அங்கன்வாடி உதவி யாளர்கள் (AWH) பயனாளிகளை அடையாளம் காணுதல், சத்தான உணவு சமைத்தல், பயனாளிகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கு தல், குழந்தைகளுக்கான பாலர் பள்ளி நடத்துதல் உள்ளிட்ட அனைத்து பரவலான பணிகளும் ஒதுக்கப்பட் டுள்ளன என்று உச்சநீதிமன்றம் கூறியது. 3 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பல்வேறு தேவை களுக்காக அடிக்கடி அவர்களது வீடு களுக்குச் செல்வது. 2013 சட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய் மார்கள் தொடர்பான மிக முக்கிய மான மற்றும் நவீன ஏற்பாடுகளை செயல்படுத்தும் பொறுப்பு அவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்கு ஒதுக்கப் பட்டது ‘பகுதி நேர வேலை’ என்ற வாதத்தை ஏற்க முடியாது. “நவம்பர் 25, 2019 தேதியிட்ட அரசுத் தீர்மானம், அங்கன்வாடி பணியாளர்கள் மற் றும் உதவியாளர்களின் கடமை களை பரிந்துரைக்கிறது, அதில் அவர்களின் வேலை பகுதி நேர வேலை என்று குறிப்பிடவில்லை. அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கட மைகளின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இது முழு நேர வேலை என்றும் நீதிமன்றம் கூறியது.
குஜராத்தில், அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.7,800, அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ.3,950 மட்டுமே வழங்கப்படுகிறது. மினி அங்கன்வாடி மையங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு ரூ.4,400 ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ஆறு மாதம் முதல் 6 வயது வரை யிலான குழந்தைகள், கர்ப்பிணி கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கு வதற்கான முக்கியப் பணிகள் அவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை நீதி மன்றம் சுட்டிக்காட்டியது. இதற்கெல் லாம், ஒன்றிய அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் மற்றும் அற்ப பலன்கள் வழங்கப்படுகிறது. சமூ கத்திற்கு இதுபோன்ற முக்கியமான சேவைகளை வழங்க எதிர்பார்க்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் அவலநிலையை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் தீவிரமாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அங்கன்வாடி மையங்கள் அரச மைப்பின் 47ஆவது பிரிவின் கீழ் வரை யறுக்கப்பட்டுள்ள அரசின் கடமை களை நிறைவேற்றுவதற்காக நிறு வப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணி யாளர் மற்றும் உதவியாளர் பதவி கள் சட்டப்பூர்வமான பதவிகள், என்று நீதிபதி ஓகா ஒரு தனி தீர்ப்பும் வழங்கினார். நீதிபதி ரஸ்தோகியும் ஒரு தனி யான- ஆனால் இணக்கமான தீர்ப்பை கூறியுள்ளார். அதில், அங்கன்வாடி பணியாளர்கள்/உதவியாளர்களால் வழங்கப்படும் பணியின் தன்மைக்கு ஏற்ப குரல் இல்லாதவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கான வழி முறைகளை ஒன்றிய / மாநில அரசு கள் கூட்டாக கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித் துள்ளார்.