புதுதில்லி, பிப். 3 - 2002-ஆம் ஆண்டு குஜராத் மதக்கல வரத்தில் அன்றைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பிருப்பதாக கூறும், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ (“India: The Modi Question”) என்ற தலைப்பி லான, 2 பகுதிகளைக் கொண்ட ஆவணப்படத்தை, பிபிசி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. ஆனால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் திரையிட ஒன்றிய பாஜக அரசு தடை விதித்தது. இந்த ஆவணப்படத்தின் லிங்குகளை கொண்ட டுவீட்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டன. அதேபோல யூடியூபில் இருந்தும் பிபிசி ஆவணப்படம் நீக்கப்பட்டது. இந்த தடையை மீறி, தெலுங்கானா, கேரளா, தில்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்களும், இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்ட நிலையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, 2002 குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்குப் பட்டுள்ள தடையை எதிர்த்து, மூத்த பத்திரிகையாளர் என். ராம், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நாடாளு மன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, வழக்கறிஞர் எம்.எல். சர்மா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
“பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படம் மீதான தடை என்பது தவறானது, தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோத மானது; அவசரக்கால அதிகாரங் களைப் பயன்படுத்தி தனது பிபிசி ஆவணப்படம் தொடர்பான டுவிட்டர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன; பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்பிய அஜ்மீர் மாணவர்கள், பல்கலைக்கழகத்தி லிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள னர். எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, பிபிசி ஆவ ணப்படத்திற்கான ஒன்றிய அரசின் தடையை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுக்களில் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை யன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிபிசி ஆவணப் படத்திற்கு தடை விதித்த விவகாரத்தில், ஒன்றிய அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையையும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.