இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாட்டின் சுதந்திர தின விழாவில் 55 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படு வார்கள் என முதலமைச்சர் அறிவித்து ள்ள நிலையில், அதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் தலைவர் மற்றும் உறுப் பினர்களை தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இதனை ஏற்க மறுத்து ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது தமிழ்நாடு மாநில மக்களின் அரசியல் உரிமைக்கு எதிரானது, அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு. பணியாளர் நியமனம் தொடர்பான அதிகாரம் மக்கள் பிரதி நிதித்துவ ஆட்சிக்குத்தான் வழங்கப் பட்டு இருக்கிறது என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கு எதிராக கல கம் நடத்தும் வன்மத்துடன் செயல்பட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசின் அதிகாரங்களாக வழங்கியுள்ள குடிமக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படுவதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை ஆர்.என்.ரவி உணர வேண்டும். அவர் செல்லும் இடங்களில் அவரது ஜன நாயக அத்துமீறலை கண்டித்து, கறுப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.