புதுதில்லி, டிச.25- ஒன்றிய அரசின் உள்துறை இணை யமைச்சரிடமே பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக 5 பேரை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு அடுத்த இடத்தில், ஒன்றிய உள் துறை இணையமைச்சராக இருப்பவர் அஜய் மிஸ்ரா. இவரது மகன்தான் அண்மையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி-யில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர். லக்கிம்பூர் கெரி சம்ப வம் இயல்பாக நடந்தது அல்ல; திட்ட மிட்ட படுகொலை என்று சிறப்பு புல னாய்வுக்குழுவும், அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில்தான், அமைச்சர் அஜய் மிஸ்ரா சம்பந்தப்பட்ட ரகசிய வீடியோ ஒன்று தங்களிடம் இருப்பதாக வும், தங்களுக்கு ரூ. 1 கோடி தரா விட்டால் அதனை போலீசில் கொடுத்து விடுவோம் என்று சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சரின் உதவி யாளர் அளித்த புகாரின் பேரில், நொய் டாவை சேர்ந்த 4 பேர் மற்றும் தில்லியின் சீரஸ்பூரை சேர்ந்த கபீர் வர்மா, அமித் குமார், அமித் மஜ்ஹி, நிஷாந்த் மற்றும் அஷ்வனி ஆகிய 5 பேரை தில்லி போலீ சார் தற்போது கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 21-26 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.