“பிரதமரின் பாது காப்பில் குறைபாடு நிகழ்ந்ததை எந்த வகை யிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறந்து நாட்டின் பிரதமருக்கு உயர் மட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்” என்று பஞ்சாப்பின் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும் வலியுறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.