states

img

ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக படுதோல்வி

புவனேஸ்வர், மார்ச் 28 - ஒடிசா மாநில நகர்ப்புற உள்ளா ட்சித் தேர்தலிலும் ஆளும் பிஜூ ஜனதாதளம் (BJD) கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜக மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில், கடந்த பிப்ரவரியில், 5 கட்டமாக கிராமப் புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மொத்தமுள்ள 851 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் ஆளும் பிஜூ ஜனதா தளம் மட்டும் 786 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வென்றன. முன்னதாக 2017-இல் நடைபெற்ற இதே தோ்தலில் சுமார் 35 சதவிகித இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2022-இல் அது 5 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்தது. இந்நிலையில், புவனேஸ் வர், கட்டாக் மற்றும் பெர்ஹா ம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சி கள் உட்பட 109 நகராட்சி, பேரூ ராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்த லிலும் பாஜக படுதோல்வி அடைந் துள்ளது. புவனேஸ்வர், கட்டாக் மற்றும் பெர்ஹாம்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் ஆளுங்கட்சியின் பிஜூ ஜனதாதள மேயர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  மேலும், மொத்தமுள்ள 109 இடங்களில் ஆளும் கட்சி யான பிஜூ ஜனதா தளம் 95 இடங் களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 6  இடங்களும், காங்கிரசுக்கு 4 இட ங்களும் மட்டுமே கிடைத்துள்ளன. சுயேட்சைகள் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.