states

img

மேற்குவங்கத்தில் இடது முன்னணியின் எழுச்சி தொடர்கிறது

கொல்கத்தா, மார்ச் 3- மேற்கு வங்கத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணியின் வாக்கு சதவிகிதம் தொடர்ச்சியாக அதி கரித்து வருகிறது. அண்மையில் சிலிகுரி, சந்தன் நகர், அசன்சால், பிதான் நகர் ஆகிய நான்கு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. முன்னதாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில், இந்த நான்கு மாநக ராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெறும் 6.33 சதவிகித வாக்குகளை யும், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 சதவிகித வாக்குகளை யுமே இடது முன்னணி பெற்றிருந்த நிலையில், சுமார் 13 சதவிகிதம் அள விற்கு வாக்குகள் அதிகரித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது 40.70 சதவிகிதம், 2021 சட்டமன்றத் தேர்தலில் 38 சதவிகிதம் என்று இருந்த பாஜக-வின் வாக்குகள் 14.5 சதவிகிதமாக குறைந்தது. அதேபோல கொல்கத்தா மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கி ரசுடன் கூட்டாக 5.1 சதவிகித வாக்கு களைப் பெற்றிருந்த இடது முன் னணி, மாநகராட்சித் தேர்தலில் தனித்து 13 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இங்கும் 8 சதவிகித வாக்குகளுடன் பாஜக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மேற்கு வங்கத்தில் 108 நகராட்சிகளுக்கு தேர்தல் நடை பெற்ற நிலையில், இதிலும், முந் தைய தேர்தல்களை விட அதிகமான வாக்குகளை இடது முன்னணி பெற் றுள்ளது.  2021 சட்டமன்றத் தேர்தலின் போது, 108 நகராட்சிகளுக்கு உட் பட்ட பகுதிகளில் 6 சதவிகித வாக்கு களையே இடது முன்னணி பெற்றி ருந்த நிலையில், தற்போது அந்த வாக்குகள் இரட்டிப்பாகியுள்ளன. மாநிலம் முழுவதும் 56 நகராட்சி வார்டுகளை மட்டுமே வென்றிருந் தாலும், ஒட்டுமொத்த வாக்கு சதவிகி தம் 6 சதவிகிதத்திலிருந்து 14.2 சத விகிதமாக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 2171 நகராட்சி வார்டுகளில் 1870 நகராட்சி வார்டு களையும் (86 சதவிகித வார்டுகள்), 108 நகராட்சிகளில் 102 நகராட்சி களையும் திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுள்ளது. 2021 சட்டமன்றத் தேர் தலில் 48 சதவிகித வாக்குகளைத் திரிணாமுல் பெற்றிருந்த நிலையில், நகராட்சித் தேர்தலில் அது 63.5 சத விகிதம் என்ற அளவிற்கும் அதி கரித்துள்ளது.

அதேநேரம் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, 38 சதவிகித வாக்கு களைப் பெற்றிருந்த பாஜக-வின் வாக்கு சதவிகிதம் தற்போது 12.6 சத விகிதமாக குறைந்துள்ளது. மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, இந்த 108 உள்ளாட்சி அமைப்பு களில் 65 இடங்களில் பாஜக-வே முன்னிலை வகித்தது. ஆனால், 10 மாதங்களுக்கு பிறகு தற்போது அங்கு நடைபெற்ற நகராட்சித் தேர்த லில் ஒரு நகராட்சியைக் கூட பாஜக-வால் கைப்பற்ற முடியவில்லை. மேலும், 2015-இல் 138 வார்டு களைக் கைப்பற்றியிருந்த பாஜக-வால், இந்தமுறை 63 வார்டுகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. இது சுயேச்சைகள் பெற்ற 119 வார்டுகள் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் 2 மடங்கு குறைவாகும். காங்கிரசிற்கு 59, இடது முன்ன ணிக்கு 56 என்ற அளவிலேயே வார்டு கள் கிடைத்திருந்தாலும், இடது முன்னணி பெற்ற வாக்குகள் (14.2 சதவிகிதம்), காங்கிரஸ் (5 சதவிகி தம்) மற்றும் சுயேச்சைகள் (4.9 சத விகிதம்) பெற்ற வாக்குகளைக் காட்டிலும் அதிகமாகும். நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் நக ராட்சியையும் இடது முன்னணி கைப் பற்றியது.

அதேநேரம், கடந்தாண்டு நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சி யாக உருவெடுத்திருந்த பாஜக வால், ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. காங்கிர சுக்கும் நகராட்சி எதுவும் கிடைக்க வில்லை. டார்ஜிலிங்கில் உள்ள பிரபல உணவகத்தின் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான அஜய் எட்வர்ட், கடந்த ஆண்டு நவம்பரில் புதிதாக துவங்கிய ஹம்ரோ கட்சி டார்ஜிலிங் நகராட்சியில் வெற்றி பெற்றுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டாங்கா, ஹூக்ளி மாவட்டத்தில் சம்ப்தானி, புருலியா மாவட்டத்தில் ஜல்டா மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா ஆகிய நான்கு நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.