states

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீடு தற்போதைய நிலையே தொடரும்

புதுதில்லி, ஜன.2- இந்தக் கல்வியாண்டில், மருத்துவ படிப்புக்கான சேர்க்கையில் பொரு ளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு தற்போது அமலில் உள்ள அளவுகோல்களே பின்பற்றப்படும் என ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.  இதுகுறித்து ஒன்றிய  அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்றுவரும் சமயத்தில், விதிகள் மாற்றப்பட்டால் குழப்பம் உண்டாகும் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுத்தாண்டு முதல் அமல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. எட்டு லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வரு மான அளவுகோல் புதிய விதிகளில் தக்க வைக்கப்படும். ஆனால், ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்கள், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், அவர்கள் இந்தப் பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற முடியாது என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாரத்தில் நலிவுற்ற வர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டு க்கான அளவுகோல் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது, அமலில் உள்ள பத்து சதவீத இட ஒதுக்கீட்டுக்கான வருமான அளவுகோல்கள் மறு சீராய்வு செய்யப்படும் என அரசின் சார்பாக ஆஜ ரான சொலிசிட்டர் ஜெனரல் நவம்பர் மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தெரிவித்திருந்தார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14, 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு ஏற்ப எட்டு லட்சம் ரூபாய் என்ற ஆண்டு வருமானம் அளவு கோலாக நிர்ணயிக்கப்பட்டது என அரசு நீதி மன்றத்தில் வாதம் மேற்கொண்டது.

அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “உங்களிடம் மக்கள்தொகை அல்லது சமூக அல்லது சமூக - பொரு ளாதார தரவு இருக்க வேண்டும். எட்டு  லட்சம் என்ற அளவுகோலை  (காற்றி லிருந்து) பறித்து நிர்ணயிக்க முடியாது. இந்தியா முழுவதும் இந்த அளவுகோல் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் நீதிமன்றம் அறிய விரும்பியது. “சிறிய நகரத்திலோ அல்லது கிராமத்திலோ ஒரு நபர் சம்பாதிப்பதை ஒரு பெரிய (மெட்ரோ) நகரத்தில் சம்பாதிப்பவர்களுடன் எவ்வாறு ஒப்பிட முடியும்?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பொருளாதாரத்தில பின்தங்கியோர் இட ஒதுக்கீடுபிரச்சனை நீட் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்தாண்டு டிசம்பரில்  தில்லியில் மருத்து வர்கள் தாமதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிபுணர் குழுவின் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் விதி முறைகள் திருத்த அறிக்கையை உச்ச  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஒப்புக்கொண்ட தை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.