“முன்பெல்லாம் சில விளையாட்டுகளைப் பற்றி மட்டுமே பேசினோம். அவர்களே ஊடகச் செய்திகளிலும் வந்தனர். தற்போது அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது” என்று நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), பிரக்ஞானந்தா (சதுரங்கம்), பிரனாய் (பேட்மிண்டன்) ஆகியோரது சாதனைகளை வெகு வாக பாராட்டிய கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்ப வான் சுனில் கவாஸ்கர், “அடுத்த 10-15 ஆண்டு களில் இந்தியா விளையாட்டு நாடாக வளரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டு காலமாக, உலக தடகள சாம்பி யன்ஷிப் போட்டியில் ஒரு இந்தியர் மேடை ஏறுவது என்பது ‘கும்பமேளா’வைப்போன்று அரிதானது. அப்படிப்பட்ட மேடையின் அருகில் சென்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா போன்ற சிலர் மட்டுமே. அதி லும், பதக்கம் என்பது கனவாகும். 2003 ஆம் ஆண்டில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்று அசத்தினார். 19 ஆண்டு களுக்குப் பிறகு, ஈட்டி எறிதலில் தங்கம் வென்று உலக தடகள அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து சாதித்திருக்கிறார் நீரஜ்.
யார் அவர்?
ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் கந்த்ரா, ஒரு குக்கிராமம். ஏழை விவசாயக் குடும்பம். தந்தை சதீஷ்குமார். இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் என மிகப்பெரிய கூட்டு குடும்பம். நீரஜ் மற்றும் 3 குழந்தைகள். வளர்ப்பது கடினமாக இருந்தது. விவசாய நிலம் கொஞ்சம் இருந்தாலும் போதிய விளைச்சல் இல்லை. வானிலையும் கருணை காட்டவில்லை. அடிக்கடி மழையும் பொய்த்து விடுகிறது. இந்த நிலையில், குழந்தைகளை மட்லாடாவில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் படிக்க வைத்தனர். ஒரு வழியாக கல்லூரி படிப்பையும் முடித்தார் நீரஜ் சோப்ரா.
நெய், கிரீம் என பால் பொருட்கள் விரும்பி சாப்பிடும் வழக்கம். இதன் விளைவு குழந்தை பருவத்திலேயே அவரது எடை ஆபத்தான அளவில் அதிகரித்தது. அதை குறைப்பதற்கு பானிபட் மைதானத்திற்கு செல்லத் தொடங்கினார். விளை யாட்டு மீது ஆர்வம் இல்லை என்றாலும், சிறுவயது நண்பர் ஒருவரின் அறிமுகம்தான் இன்றைக்கு உல கமே அவரை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது.
அன்றைக்கு இதுதான் தொழில்துறை விளை யாட்டாக மாறும் என்று ஒருபோதும் அவர் நினைத்து பார்க்கவில்லை. மூத்த வீரர்கள் பலரும் ஈட்டி எறி வதை பார்த்து பார்த்து தானும் முயற்சித்தார். அவரி டம் இருந்த அபாரத் திறமையை பாராட்டிய தடகள வீரர் ஜெய்வீர் பயிற்சியில் சேர்த்துவிட்டார்.
நம் ஊரைப்போன்று பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாத கிராமம் அது. பயிற்சி மைதானத்திற்கு தினமும் 17 கிலோ தூரம் பயணிக்க வேண்டும். வீட்டில் வறுமை. போதிய பணம் கிடைக்க வில்லை. அந்த வழியாகச் செல்லும் கனரக வாக னங்களில் லிப்ட் கேட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டார். தந்தையும், அவரது சகோதரரும் நீரஜ்சோப்ராவின் கனவும், பயிற்சியும் தடைபடாமல் பார்த்துக்கொண்டனர்.
வெற்றிப் பயணம்...
தடைக் கற்கள் பலவும் தாண்டி பயிற்சிக்குச் சென்ற அவர், தன்னம்பிக்கையை ஒருநாளும் இழந்தது கிடையாது. தனது முதல் தேசியப் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது ரூ.7 ஆயி ரத்திற்கு சாதாரண தரத்தில் ஈட்டியை வாங்கினார். பிறகுதான், பயிற்சியின் தரத்தை மேம்படுத்தினார்.தேசிய முகாமில் சேர்ந்ததும். ரூ. 1 லட்சம் மதிப்பி லான சர்வதேச தரத்திலான ஈட்டியில் பயிற்சி கொடுத்தனர். மேலும் வெளிநாடுகளுக்கு சென்றும் பயிற்சி எடுத்தார். மூத்த வீரர் ராஜேந்திரர், வெளி நாட்டு வீரர்கள் பலரது வீடியோக்களையும் பார்த்து நிறைய கற்றுக்கொண்டார். பல வருடமாக மேற்கொண்ட பயிற்சிக்கு பிறகு ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாரா னார். அப்போது முதுகில் ஏற்பட்ட காயம் அவரை பெரிதும் பாதித்தது. பயிற்சியாளர்களின் நம்பிக்கை மற்றும் தடகள சம்மேளனத்தின் ஆதரவுடன் காயத்திலிருந்து மிக விரைவாக மீண்டார். தங்கப் பதக்கம் வென்று கொடுத்தார். தங்கமகன் 2016 ஆம் ஆண்டு போலந்தில் நடந்த சர்வதேச இளைஞர்-20 சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கத்தை தட்டி வந்தார். அதன் தொடர்ச்சியாக தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 82. 23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கம் வென்று கொடுத்தார்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 85.23 மீட்டர் தூரத்திற்கும் 2018 ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர் தூரத்திற்கும் அதே ஆண்டில் நடந்த ஆசிய விளை யாட்டுப் போட்டியில் 88.06 மீட்டர் தூரத்திற்கும் ஈட்டியெறிந்து அடுத்தடுத்து தங்கப் பதக்கங்களை வென்று இந்திய தடகளத்தில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தார்.
2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கம் வென்று சாதித்துக் காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்திய அவருக்கு ராணுவத்தில் பணி வழங்கப்பட்டது.
இந்திய தடகள உலகில் ஜொலித்த அவர், கடந்த ஆண்டில் டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து ஒலிம்பிக் நாயகன் என்பதை நிரூபித்து காட்டினார். இதுவே இவரது உச்சபட்ச சாதனையாகும். அதே வேகத்தில் ஹங்கேரி நாட்டில் தற்போது நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கினார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருந்தாலும், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தில்லை. அந்தக் குறையை தற்போது நிறை வேற்றுவார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 25 வயதான ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா, முதல் சுற்றில் 88.77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து மிரட்டியதுடன் 2024 ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். பாகிஸ்தான் வீரர் தொடர்ந்து பெரும் சவால்கொடுத்தார். தொடர்ந்து அசத்திய நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம்வென்றார்.
கிராமத்தில் கொண்டாட்டம்
கந்த்ரா எனும் குக்கிராமத்தில் பிறந்து உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான தருணம். ஒலிம்பிக்ஸ், உலக தடகள சாம்பியன்ஷிப் என அனைத்து முக்கிய தொடர்களிலும் தங்கம் வென்ற அவரது சாதனையை, சொந்த கிராம மக்களும், உறவினர்களும் கொண்டாடி வருகின்ற னர். உலக தடகளத்தில் தங்கப்பதக்கம் தட்டி வந்த முதல் இந்தியரான நீரஜ் சோப்ரா, இந்தியா திரும்பியதும் விமரிசையாக கொண்டாடுவோம் என்று அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.
இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியான நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி தொடர்ந்து வெற்றிகளை தேடிக் கொடுத்து வரு கிறது. அரியானாவின் இந்த தங்கக் குழந்தை, தேசத்தின் நிஜ ஹீரோவாக மாறியது. இது ஒரு சாம்பியனின் எழுச்சி சாதனையல்ல... வரலாறு! - சி.ஸ்ரீராமுலு