புதுதில்லி, மார்ச் 26- அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், பெட்ரோல், டீசல், எரி வாயு சிலிண்டர் விலை உயர்வைத் தொட ர்ந்து, தற்போது மருந்து, மாத்திரைகளின் விலையும் உயர்கிறது. அதாவது 2022 ஏப்ரல் 1 முதல், தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியலிலுள்ள 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவிகிதம் வரை உயர்கிறது. காய்ச்சல், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், தோல் நோய்கள் மற்றும் இரத்த சோகை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் விலை உயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதாவது பாராசிட்டமால், பெனோ பார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் மெட்ரா னிடசோல் போன்ற மருந்துகளுக்கும் கூட இனி கூடுதலாக செலவிட வேண்டியது இருக்கும். கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, மருந்துகளின் விலையை உயர்த்தக் கோரி மருந்துத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக, கடந்த 2021 நவம்பர் மாதம், 1000-க்கும் மேற்பட்ட இந்திய மருந்து உற்பத்தியாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பின் பிரதிநிதிகள், அனைத்து மருந்துகளின் விலையையும் 10 சதவிகிதம் அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென ஒன்றிய அரசு அதிகாரிகளி டம் கோரிக்கை வைத்தனர். அத்துடன் திட்டமிடப்படாத அனைத்து மருந்து களின் விலையையும் 20 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால், மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் உயர்வு காரணமாகவே தற்போது மருந்துகளின் விலை உயர் வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மருந்துகள் (விலைக் கட்டுப் பாடு) ஆணை, 2013-இன் விதிகளின்படி இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் விலை உயர்வுக்கான அறி விப்பை வெளியிட்டுள்ளது. 2021 காலண்டர் ஆண்டிற்கான மொத்த விலைக் குறியீட்டில் (Wholesale Price Index) 10.7 சதவிகித உயர்வை 2020 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்தது. தற்போது, பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அலு வலகம் வழங்கிய தரவுகளின் அடிப்படை யில் 2022-ஆம் ஆண்டிலும் 10.7 சதவிகி தம் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. நோயாளி உரிமைகள் குழுவான அகில இந்திய மருந்து நடவடிக்கை அமைப்பைச் (All India Drug Action Network) சேர்ந்த சீனு சீனிவாசன் இது தொடர்பாக கூறுகையில், மொத்த மருந்துச் சந்தையில் 16 சதவிகித விலைக் கட்டுப்பாட்டில் உள்ள மருந்துகளின் விலையும் 10 சதவிகிதம் அதிகரிக்க உள்ள தாக தெரிவித்துள்ளார்.