states

img

முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி - ஒரு கேலிக்கூத்து

ஜெனரல் பிபின் ராவத்துக்குப் பிறகு...

ஜெனரல் பிபின் ராவத் இறந்த பிறகு 9 மாதங்கள் வரையிலும் முப்படைத் தளபதி களின் தலைமைத் தளபதி பதவிக்கு யாரும் நியமிக்கப்படாதது நாட்டின் பாது காப்பு அமைப்பில் இது போன்ற பதவிக்கு அவசியம் இல்லை என்பது தெளி வானது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிபின் ராவத்துக்குப் பதிலாக ஒரு ஓய்வு பெற்ற தளபதி  அந்த பதவிக்கு நியமிக்கப்படவில்லை. மாறாக, அந்த நியமனப் பதவிக்கான வழிகாட்டு நெறிமுறை களை திடீரென மாற்றியமைத்து ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் அனில் சவுகான் என்பவர்  முப்படைத் தளபதிகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர் பிபின் ராவத்தைப் போன்றே கூர்க்கா படைப் பிரிவில் பணிபுரிந்தவர். ராவத்தின் அதே உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் குறிப்பிட்ட மாநில அதிகாரிகளின் ஆதிக்கம் ஓங்கு வதை கவனிக்காமல் கடந்து செல்ல முடியாது. அனில் சௌகான் ராணுவத்தின் கிழக்குப் படை  தளபதியாக இருந்தவர். பின்னர் டேராடூன் பயிற்சி பள்ளிக்குத் திரும்பினார். பின்னர் தில்லியில்  தேசிய பாதுகாப்பு அலுவலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பின்னர்  முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

ராணுவத்தை நவீனப்படுத்துவோம் என்பது மோடியின் முதன்மை உறுதிமொழிகளில் ஒன்றாகும். முப்படைத் தளபதிகளுக்கும் மேலாக ஒரு தளபதி என்பது பாஜக அரசின் திட்டமாகும். 2019 இல் முப்படைத் தளபதிகளின் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டார். இது மோடி அரசின் துணிச்சலான முடிவு என்று பரவலாக பாராட்டப்பட்டது. இதில் பல்வேறு நிர்வாக ரீதியான ,ராணுவ பாரம்பரியம் குறித்த தர்க்க ரீதியான கேள்விகள் எழுந்தன. பாதுகாப்பு அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு அளித்த அசல் முன்மொழிவு என்பது பணியாளர் குழுவிற்கு ஒரு நிரந்தரத் தலைவரை (The Chief of Staff Committee) நியமிக்க வேண்டும் என்பதாகும். முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளர் ஒருவர் இது பற்றிக் கூறும் போது, பாதுகாப்பு படைகளின் பணியாளர் குழுவிற்கான நிரந்தரத் தலைவர் என்பதைவிட “முப்படைகளின் தலைமைத் தளபதி” (Chief of Defence Staff) என்பது அரசியல் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய தெளிவான பதவியைக் குறிப்பிடும் அர்த்த அடர்த்தி மிக்க சொல் என்று குறிப்பிட்டார். முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி பாதுகாப்புத்துறை அமைச்சரவை செயலரின் பதவிக்கு சமமானதாகும். முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலர் ஒருவர் குறிப்பிட்டது போல முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி அனைத்து ராணுவப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக மோடி அரசால் முன் வைக்கப்பட்டது. எந்த பிரச்சனை என்றாலும் அரசு மற்றும் ஊடகம் உட்பட அனைவரின் கவனமும் முப்படைகளின் தலைமைத் தளபதி பக்கமே திரும்பியது. இவரின் சீருடை,பேட்ஜுகள் கூட சர்ச்சைக்குரியதாக இருந்தது. இரண்டாவது முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கு முப்படைகளின் தலைமைத் தளபதி பற்றிய பதவியை அறிவிப்பதில் இரண்டு நிகழ்ச்சி வாய்ப்புகள் இருந்தன. செங்கோட்டையில் 2019 ஆகஸ்ட் 15 விடுதலை தின விழா உரையின் போது சினிமா பாணியில் இந்த பதவி பற்றி அறிவிப்பு செய்வது; அல்லது 2019 டிசம்பர் 31 இல் ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஓய்வு பெறும் போது அறிவிப்பது‌ ஆகிய இரண்டு வாய்ப்புகள் மோடி முன்பு இருந்தன. மோடியின் அரசுக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் மிகவும் பிடித்தமான, நம்பகமான, விசுவாசமான அதிகாரியாக ஜெனரல் பிபின் ராவத் இருந்தார். அவர் 2016 இல் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போதே சர்ச்சைகள் எழுந்தன. அவரைவிட பணிமூப்பில் மூத்தவர்களாக இருந்த இரண்டு அதிகாரிகளை வீழ்த்தித் தான் பிபின் ராவத் ராணுவத் தளபதியானார். அந்த இருவரில் ஒருவர் முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. முப்படைகளின் தலைமைத் தளபதிக்கு மும்மடங்குப் பணிகள் இருந்தன. முப்படைத் தளபதிகளுக்குத் தலைவர், ராணுவப் பணியாளர்கள் குழுவின் நிரந்தரத் தலைவர் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான செயலாளர் என்று மூன்று பெரும் பணிகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் மோகன் குமார் என்பவர் இந்த பதவியை ‘சூப்பர் ஜெனரல்- சூப்பர் அதிகாரத்துவம் (Super General-- Super Bureaucracy)’ என்று குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள ராணுவ அதிகாரிகளின் ஒரு பகுதியினரை வேண்டுமானால் இந்த முடிவு திருப்திப்படுத்தலாம். ஆனால்,கடந்த ஏழு தசாப்தங்களாக சிவில் அதிகாரத்துவத்தில் இருந்து வந்த முறையான பதவி அடுக்குகளை இப் புதிய பதவி முற்றிலுமாக நீக்குகிறது. இந்த மாற்றத்தின் அர்த்தம், தலைமைத் தளபதி அரசால் நியமனம் செய்யப்படுவதாக உள்ளதால், ராணுவத்தின் மீதான குடிமக்களின் கட்டுப்பாடு, இப்போது நேரடியாக அரசியல் நிர்வாகத்திடம் இருந்தே பிறப்பிக்கப்படும் என்பதாகும். இது ராணுவத்தின் முக்கியமான செயல்பாடுகளில், அரசியல் தலைமை தலையீடு செய்யும் மற்றும் பாரபட்ச நோக்கங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் அரசியல் தலைமையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியக் காவல் பணி நிர்வாகத்தை ஒத்ததாக இருக்கிறது. ராணுவக் கலகம் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற அபாயங்களையும் கொண்டு வந்துள்ளது. அதிகாரம் மிக்க இந்தப் பதவி மூலம், வலிமையற்ற அல்லது மக்கள் செல்வாக்கு இல்லாத அரசியல் தலைமை அல்லது அரசியல் நெருக்கடியின் போது ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றுதல் போன்ற ஆபத்து நேர வாய்ப்புள்ளது.நாடு விடுதலை பெற்ற முதல் தசாப்தத்தில் பாதுகாப்புப் படைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நேர் எதிர்த் திசையில் மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அமைந்திருந்தன.