புதுதில்லி, ஜூலை 13- தில்லியில் ரூ.1,250 கோடி செலவில் கட்டப் பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் உச்சியில் 9,500 கிலோ எடை கொண்ட 20 அடி உயர பிரமாண்டமான- முழுக்க முழுக்க வெண் கலத்திலான தேசிய சின்னத்தின் வடிவத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த திங்களன்று (ஜூலை 11) திறந்து வைத்தார். ஆனால், மோடி திறந்து வைத்த நினைவுச் சின்னம் அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு உள் ளாகி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, நமது ஜனநாயகத்தின் மூன்று தூண்களான - நிர்வாகம் (அரசாங்கம்), நாடாளுமன்ற அமைப்பு (நாடாளுமன்றம், மாநில சட்ட மன்றங்கள்) மற்றும் நீதித்துறை ஆகியவற்றை மிகத்தெளிவான முறையில் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறது. அவற்றுக்கு அதி காரங்களை பகிர்ந்தளித்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற அமைப்பைப் பொறுத்தவரை, சபாநாயகருக்கே அதிகாரம் எனும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தை சபாநாயகர்தான் திறந்து வைத்திருக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தது சரியல்ல!; அதேபோல, தேசிய சின்னம் திறப்பு விழா விற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களையும் அழைத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.
இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயக குடி யரசு என்ற நிலையில், தேசிய சின்னம் திறப்பு விழாவில் குறிப்பிட்ட மதசம்பிரதாயப்படி பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு திறப்பு விழா அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாக அமைந்துள்ளது- என்று காங்கிரஸ், இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் என முக் கிய எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. இதனிடையே, தேசிய சின்னத்தின் வடிவ மைப்பிலும் மோடி அரசு தில்லுமுல்லுவை அரங்கேற்றியிருப்பதாக புதிய சர்ச்சை எழுந் துள்ளது. அமர்ந்த நிலையில் இருக்கும் நான்கு சிங்கங்களை உடைய நாட்டின் தேசிய சின்னம், முன்பு அமைதியை பறைசாற்றிய நிலையில், தற்போது அந்த சிங்கங்களை, மோடி அரசா னது, ஆக்ரோஷமாக மனிதர்கள் மீது பாய்வது போன்று மாற்றி அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1,700 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தனது முதல் உரையில் நான்கு தர்மங்கள் குறித்து போதித்த இடம் சாரநாத் ஆகும். அது தற்போ தைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந் துள்ளது. புத்தரின் முதல் உரை நிகழ்ந்த அந்த இடத்தை வரலாற்றில் நிலைநிறுத்தும் வகை யில், மவுரிய பேரரசர் அசோக சக்ரவர்த்தி, சாந்தமாக அமைந்திருக்கும் நான்கு சிங்கங்க ளைக் கொண்ட தூணை அமைத்தார்.
1947-இல் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த தும் சாரநாத் தூணில் இடம்பெற்ற அந்த நான்கு சிங்கங்களே தேசிய சின்னமாக அறிவிக்கப் பட்டது. அது அரசு வெளியிட்ட ரூபாய் நோட்டு கள் மற்றும் நாணயங்களிலும் தற்போது இடம்பெற்று வருகிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தற்போது திறந்து வைத்துள்ள தேசிய சின்னம், சாரநாத் தூணில் உள்ள சிங்கங்களைப் போல் அல்லா மல் மாறுபட்டு இருப்பதாகவும், சிங்கங்கள் வாயைப் பிளந்தபடி கோபம் கொப்பளிக்க பாய் வதற்கு தயாராக இருப்பது போன்றும் வடி வமைக்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று ஆய் வாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களை யும் கொந்தளிக்க வைத்துள்ளது. வரலாற்று ஆய்வாளர் எஸ்.இர்பான் ஹபீப் வெளியிட்டுள்ள கண்டனத்தில், “நமது சிங்கங்கள் ஏன் மூர்க்கமாகவும், கோபம் நிறைந் ததாகவும் இருக்க வேண்டும்? இவை அசோக ரின் சிங்கங்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள் ளார். “நரேந்திர மோடி அவர்களே, தேசிய சின்னத்தில் உள்ள சிங்கத்தின் முகத்தை கவனி யுங்கள். சாரநாத்தில் உள்ள சிலையில் இருக்கும் சிங்கங்களின் உருவத்தை அவை பிரதிபலிக்கிறதா அல்லது கிர் காடுகளில் உள்ள சிங்கத்தின் சிதைக்கப்பட்ட உருவமாக அது உள்ளதா என்பதைப் பாருங்கள். அதை சரி பார்த்து தேவை ஏற்பட்டால் உரிய மாற்றத்தைச் செய்யுங்கள்” என்று காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி யுள்ளார்.
மூத்த வழக்குரைஞரும் சமூக ஆர்வலரு மான பிரசாந்த் பூஷண் “நமது தேசிய சின் னத்தில் உள்ள சிங்கங்கள் அமைதியாகவும் கண்ணியமாகவும் அமர்ந்துள்ளன. புதிய நாடா ளுமன்றக் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னத்தில் சிங்கங்கள் கூர்மையான கோரைப்பற்களுடன் கோபத்துடன் உள்ளன. இதுதான் மோடியின் புதிய இந்தியா போலும்” என்று விமர்சித்துள்ளார். “தேசிய சின்னம் சாந்தமான தோற்றத்தைக் கொண்டது. ஆனால் புதிதாக திறக்கப்பட்டுள்ள சிலை மனிதர்களை விழுங்குவது போன்று உள் ளது” என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி காட்டமாக குறிப்பிட்டுள் ளது. “அசோக சின்னத்தில் உள்ள சிங்கம் சாந்தமாக அதேவேளையில் கம்பீரமாக தோற்றமளிக்கும். அத்துடன் அழகாகவும், நம் பிக்கையளிப்பதாகவும் இருக்கும். ஆனால், புதிய நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டுள்ள சிலை மோடியைப் போன்றது. தேவையற்ற சினம் கொண்டது. சமநிலையற்றது. அதன் உருவம் சீராக இல்லாமல் அதிக அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நாட்டிற்கே தலைக்குனிவு. இதனை உடனடி யாக மாற்ற வேண்டும்” என திரிணாமுல் காங்கி ரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜவ ஹர் சிர்கார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு எம்.பி. யான மஹூவா மொய்த்ரா, பழைய சின்னத்தை யும், புதிய சிங்கச்சின்னத்தையும் டிவிட்டரில் பதிவிட்டு மெளனமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
“நாடாளுமன்றமும் தேசிய சின்னமும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனி மனி தருக்கானது அல்ல” என காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் குறிப்பிட்டுள்ளார். அசாம் காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், “அரசியலின் ஷோமேன் ஆவதற்கு பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். இது ஒரு கட்சி நிகழ்ச்சி அல்ல, முழு நாட்டிற்கும் சம்பந்தமான ஒன்று. எதிர்க்கட்சியை ஏன் அழைக்கவில்லை?. நிர்வாகம் பற்றிய பிரதமரின் அணுகுமுறை ஒரு ஆட்சியாளரின் அணுகுமுறையாகும். அவர் (மோடி) சர்வாதிகாரி போல் ஆட்சி செய்கிறார்” என சாடியுள்ளார். இதனிடையே, மோடி திறந்துவைத்த தேசிய சின்னத்தை வடித்த சிற்பி சுனில் தியோர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “இது சாரநாத்தில் உள்ள தேசியச் சின்னத்தின் மாதிரி வடிவம்தான். புதிய சிற்பத்தின் புகைப்படங் கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சிற்பத் தின் கீழே இருந்து எடுக்கப்பட்டவை. அ அதனால் வெளிப்பாடுகள் ஆக்ரோஷமாகவும், வாய் பெரிதாகவும் தோன்றுகிறது” என்று சமா ளித்துள்ளார்.
பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலூனியும்,‘‘சாரநாத்தில் உள்ள அதே மாதிரியான தேசிய சின்னம்தான் புதிய நாடா ளுமன்ற கட்டிடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. எதுவும் மாறவில்லை. 150 ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர்கள் உருவாக்கிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக, இந்தியாவின் சொந்த நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடி ஆட்சி யில் கட்டப்படுகிறதே என்ற விரக்திதான் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம். அரசியல் ஆதா யத்திற்காகத்தான் அவர்கள் ஒரு பிரச்ச னைக்கு பிறகு இன்னொன்று என தொடர்ந்து பிரச்சனையை கிளப்புகிறார்கள்’’ என்று கூறி யுள்ளார்.