இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1270 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பரவிய ஒமைக்ரான் தொற்று இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி இருப்பதாக அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் 450 பேரும், டெல்லியில் 320 பேரும், கேரளாவில் 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 97, ராஜஸ்தானில் 69, தெலுங்கானாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் 46 பேர் ஒமைக்ரான் பாதிப்புடன் உள்ளனர். மேலும் கர்நாடகாவில் 34 பேரும், ஆந்திராவில் 16 பேரும், அரியானாவில் 12 பேரும் ஒமைக்ரான் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் ஒமைக்ரான் பாதித்த 1,270 பேரில் 374 பேர் குணமடைந்து விட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.