புதுதில்லி, பிப். 10 - இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு வெளிநாடுகளில் குடி யேறும் இந்தியர்களின் எண்ணிக்கை 2022-ஆம் ஆண்டில் இரட்டிப்பாகி உள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு களுக்குச் செல்லும் இந்தியா்கள் அங்கேயே தொடா்ந்து தங்கி விடுவதும் இந்திய குடியுரிமையைக் கைவிடுவதும் வழக்கமாக உள்ளது. இந்தியாவில் இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதில்லை என்பதால், ஏதாவது ஒரு நாட்டின் குடியுரிமையை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் வரும்போது, அவர்கள் இந்தியக் குடியுரிமையை கைவிட்டு, வெளிநாடுகளிலேயே தங்கி விடுகின்றனர். அந்த வகையில்தான், 2011 முதல் 2022 வரையிலான 12 ஆண்டு களில் மொத்தம் 16 லட்சம் பேர்
இந்தியக் குடியுரிமையைத் துறந்து, வெளிநாடுகளை ஏற்றுக் கொண்டிருப்பதாக, ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற மாநிலங் களவையில் அறிக்கை அளித்துள்ளார். நரேந்திர மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு, 2011-ஆம் ஆண்டில் 1,22,819 பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர். இதேபோல 2012-இல் 1,20,923 பேர், 2013-இல் 1,31,405 பேர், 2014-இல் 1,29,328 பேர் என இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 2015-ஆம் ஆண்டில் 1,31,489 பேர், 2016-இல் 1,41,603 பேர், 2017-இல் 1,33,049 பேர், 2018-இல் 1,34,561 பேர், 2019-இல் 1,44,017 பேர் என குடியுரிமையைத் துறந்தனர். கொரோனா காரணமாக 2020இல் குடி யுரிமையைத் துறந்தோரின் எண்ணிக்கை 85,256 ஆக குறைந்தது. ஆனால், அதன்பின்னர் மீண்டும் இந்த எண்ணிக்கை உயரத் துவங்கி யுள்ளது. அதிலும் 2022-இல் இரட்டிப் பாகி இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் 1,63,370 பேர் இந்திய குடி யுரிமையை துறந்த நிலையில், 2022-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில், இந்தியக் குடியுரிமையைத் துறந்தோர் எண்ணிக்கை 2,25,620 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சத்து 63 ஆயிரத்து 440 பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். இவர்களில் அதிகபட்சமானோர் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடு களை தங்களின் நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.