குரூரமான மோசடி இது!
இது மற்றுமொரு குரூரமான ஜும்லா ஆகும். அதாவது தேர்தல் கால வாக்குறுதி மோசடி. 2019 தேர்தலின் போது ஆண்டுக்கு மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கப்போவதாக பி.எம். - கிசான் திட்டத்தை மிகுந்த படாடோபமாக அறிவித்தார் பிரதமர் மோடி. மூன்றே ஆண்டுகளில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை 67 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை என்ற சட்டப்பூர்வ உரிமை அறிவிக்கப்படவில்லை. உடனே அதைச் செய்யுங்கள். விளை பொருட்களின் உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதாரவிலையாக பெறுவதை சட்டஉரிமையாக ஆக்கும் சட்டத்தை அரசு அவசியம் நிறைவேற்ற வேண்டும்.
புதுதில்லி, நவ. 20 - பிரதமரின் கிசான் சம்மன் நிதி (பிஎம் - கிசான்) திட்டத்தின் மூலம் பயனடை ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பிரதமரின் கிசான் திட்டம் மூலம் வழங்கப்படும் நிதியிலிருந்து 11-ஆவது தவணையைப் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவீதமாகக் குறைந்து விட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட பதில் ஒன்றிய வேளாண் அளித்துள்ள விபரங்களே இதை அம்பலப்படுத்துகின்றன. பிரதமரின் கிசான் திட்டம 2019-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப் பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். இது தகுதியான விவசாயி களின் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ6,000 வழங்குகிறது. தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக விவசாயி களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.
இதை பிரதமர் மோடி தனது மாபெரும் திட்டமாக படாடோபமாக அறிவித்தார். ஆனால், 2022-ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் 3.87 கோடி விவசாயிகள் மட்டுமே 11-ஆவது தவணையாக ரூ.2,000-ஐ தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுள்ளனர் என்று ஒன்றிய அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் தவணைத் தொகையைப் பெற்ற 11.84 கோடி விவசாயிகளுடன் 11-ஆவது தவணைத் தொகையைப் பெற்ற விவசாயிகளுடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகள் மட்டுமே ரூ.2,000-த்தை பெற்றுள்ளனர். 12-ஆவது தவணைத் தொகை 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணைத் தொகையான ரூ.2,000-த்தை 11.84 கோடி விவசாயிகள் பெற்றனர். திட்டம் தொடங்கப்பட்டு ஆறாவது தவணைத் தொகையைப் பெற்றவர்கள் 9.87 கோடிப் பேர். ஏழாவது தவணையை 9.30 கோடி, எட்டாவது தவணையை 8.59 கோடி, ஒன்பதாவது தவணையை 7.66 கோடி பத்தாவது தவணையை 6.34 கோடி பேரும் பெற்றுள்ளனர்.
தவணைத் தொகையைப் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை ஏன் கடு மையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்ற கேள்விக்கு ஒன்றிய அமைச்சகம் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் பய னாளிகளின் எண்ணிக்கை 55.68 லட்சத்தில் இருந்து 28.2 லட்சமாகக் குறைந்துள்ளது. சத்தீஸ்கரில் முதல் தவணையை 37 லட்சம் பேர் பெற்றி ருந்த நிலையில் பதினோராவது தவணை யை இரண்டு லட்சம் விவசாயிகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களிலும் வீழ்ச்சி
தேர்தலைச் சந்திக்கும் குஜராத்தில் 2019-ஆம் ஆண்டு 63.13 லட்சம் விவசாயி கள் இந்தத் தொகையைப்பெற்றனர். 2022-ஆம் ஆண்டு 28.41 லட்சம் விவசாயிகள் மட்டுமே பயனடைந்துள்ள னர். ஹரியானாவில் முதல் தவணையை 19.73 லட்சம் விவசாயிகளும், 11-ஆவது தவணையை 11.59 லட்சம் விவசாயி களும் பெற்றுள்ளனர். மகாராஷ்டிரா வில், 2019-ஆம் ஆண்டு 1.09 கோடி யாக இருந்த எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு 37.51 லட்சமாகக் குறைந்துள் ளது. மத்தியப் பிரதேசத்தில், 2019-ஆம் ஆண்டு 88.63 லட்சம் விவசாயிகள் உதவித் தொகையைப் பெற்றனர். இவர்களில் 12,053 பேர் மட்டுமே 2022-ஆம் ஆண்டு உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். பஞ்சாப்பில் 2019-ஆம் ஆண்டு 1.95 லட்சம் விவசாயிகள் பலன் பெற்றனர். இது 2022-ஆம் ஆண்டு 11.31 லட்சமாக வீழ்ந்து விட்டது உத்தரப்பிரதேசத்தில், 2019-ஆம் ஆண்டு 2.6 கோடி விவசாயிகள் இந்த உதவியைப் பெற்றனர். 2022-ஆம் ஆண்டு அது பாதியாக அதாவது 1.26 கோடியாகக் குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில், 2019-ஆம் ஆண்டு 45.63 லட்சம் விவசாயிகள் உத வித் தொகையைப் பெற்றுள்ளனர். இந்த மாநிலத்தில் ஆறாவது தவணைக்குப் பின் விவசாயிகள் யாருக்கும் பணம் கிடை க்கவில்லை. இதுதொடர்பாக ஒன்றய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோம ரிடம் மாநில அரசு கேள்விஎழுப்பியுள்ளது. அசாமில் பணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 28.79 லட்சத்தில் இருந்து 2.54 லட்சமாகவும் குறைந்துள்ளது. சண்டி கரில், 2022-ஆம் ஆண்டு மே-ஜூன் மாதத்தில் மூன்று பேர் மட்டுமே உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். தில்லியில், 16,513- ஆக இருந்த விவசாயி களின் எண்ணிக்கை 2,065 ஆகக் குறைந்துள்ளது. இமாச்சலப் பிர தேசத்தில் 9.86 லட்சத்திலிருந்த எண்ணிக்கை சரிபாதியாக 5.43 லட்ச மாகக் குறைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில், 2019-ஆம் ஆண்டு 12.07 லட்ச மாக இருந்த பயனாளிகள் எண்ணிக்கை 5.61 லட்சமாகக் குறைந்துவிட்டது.
தமிழ்நாட்டில்...
தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு 46.8 லட்சம் விவசாயிகள் பலனடைந்தனர். ஆனால் அது 2022-ஆம் ஆண்டு 23.04 லட்சமாக வீழ்ந்துவிட்டது. தெலுங்கா னாவில் முதல் தவணை உதவித் தொகை யைப் பெற்றவர்கள் 39.10 லட்சம். அது 2022-ஆம் ஆண்டு 24.32 லட்சமாகக் குறைந்துவிட்டது. திரிபுராவில் பல னடைந்த விவசாயிகள் எண்ணிக்கையும் பாதியாகக் குறைந்துள்ளது.
விவசாயிகள் சங்கம் அதிர்ச்சி
இதுகுறித்து அகில இந்திய விவசாயி கள் சங்கத் தலைவர் அசோக் தாவ்லே கூறுகையில், “இந்த தரவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது” என்றார். 2022-ஆம் ஆண்டு தரவுகளின்படி மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகள் பணம்பெறவில்லை. பயனாளிகளின் எண்ணிக்கையில் இவ்வ ளவு குறைவு ஏன் என்பதற்கு தர்க்கரீதி யான காரணம் எதுவும் இல்லை. இந்தத் திட்டத்தை மெதுவாக முடக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதையே இது காட்டு கிறது. விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத் தவிர்க்க இந்தத் திட்டம் மற்றொரு ஜும்லா தேர்தல் கால வாக்குறுதி மோசடி ஆகும் என்றார்.