பெங்களூரு, மே 1 - கர்நாடகத்தில் மே 10 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இதற்கான தீவிரப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புக்களை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அண்மையில் 7 ஊட கங்கள் தங்களின் கருத்துக் கணி ப்புக்களை வெளியிட்டிருந்தன. அவற்றில் 2 கருத்துக் கணிப்புக்கள் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறி யிருந்தன. ஏனைய 5 கணிப்புக்கள் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்று கூறியிருந்தன. பாஜக தனிப்பெரும் பான்மை பெறும் என ஒரு ஊடகம் கூட கூறவில்லை. இதில், காங்கிரஸ் தனிப்பெரும் பான்மை பெறும் என்று கூறிய ‘ஈடினா’ ஊடகம், ‘‘காங்கிரஸ் கட்சி குறைந்தது 132 முதல் அதிகபட்ச மாக 140 இடங்களில் வென்று ஆட்சியமைக்கும்; பாஜக 57 முதல் 65 இடங்களையே கைப்பற்றும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 முதல் 25 இடங்களில் வெற்றி பெறும்” என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், ‘சி டெய்லி டிராக்கர்’ (C Daily Tracker), ‘ஏபிபி சி வோட்டர்’ (ABP C Voter) நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், காங்கிரஸ் கட்சி கர்நாட கத்தில் வரலாற்று வெற்றியை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 44.4 சதவிகித வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 130 முதல் 157 தொகுதிகளில் வெற்றி பெறும் என ‘சி டெய்லி டிராக்கர்’ தெரி வித்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் தற்போது அந்த கட்சி கூடுதலாக 77 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.
அதேநேரம் பாஜகவுக்கு 37 முதல் அதிகபட்சமாக 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும், அக்கட்சி 30.6 சதவிகித வாக்குகளைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகள் தவிர, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம் 18 சதவிகித வாக்குகளுடன் 22 முதல் 34 தொகுதிகளையும், மற்றவர்கள் 7 சதவிகித வாக்குகளுடன் அதிகபட்சமாக 3 தொகுதிகளையும் கைப்பற்றலாம் என்றும் தெரி விக்கப்பட்டு உள்ளது. ‘ஏபிபி சி வோட்டர்’ நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி 107 முதல் 119 இடங்களையும், பாஜக 74 முதல் 85 இடங்களையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக முதல்வராக யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிற்கு 41 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு 31 சதவிகிதம் பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. எச்.டி. குமாரசாமிக்கு 22 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தின் தற்போதைய முக்கியப் பிரச்சனை என்ன? என்ற கேள்விக்கு வேலை வாய்ப்பின்மையே என்று 30 சத விகிதம் பேரும், அடிப்படை வசதி கள் இன்மை என 24 சதவிகிதம் பேரும், கல்வி என 14 சதவிகிதம் பேரும், ஊழல் என 13 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.