தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் பிர்போஸ் சுல்தானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அளித்த நேர்காணலில் இருந்து
கேள்வி: நீங்கள் சமீபத்தில் மணிப் பூருக்கு பயணம் செய்தீர்கள். ஒரு இனப் பிரிவு தனி மாநிலம் கேட்கும் அளவுக்கு எப்படி நிலைமைகள் மோசமாயின?
பதில்: அங்கு நிலைமை மிகவும் கொடூரமாக உள்ளது. தேசத்தின் எந்த பகுதியிலும் இப்படி ஒரு நிலை மையை நான் வாழ்நாளில் பார்த்தது இல்லை. உண்மையில் அங்கு ஒரே மாநிலத்தில் இரு தேசங்கள் உள்ளன. நாங்கள் மெய்டெய் மற்றும் குக்கி மக்கள் வாழும் இரு பகுதிகளுக்கும் சென்றோம். நீங்கள் மெய்டெய் பகுதி யிலிருந்து குக்கி பகுதிக்கு செல்வதாக இருந்தால் அங்கு எந்த ஒரு மெய்டெய் யும் அனுமதிக்கப்படுவது இல்லை. நாங்கள் குக்கி பகுதிகளுக்கு சென்ற பொழுது மெய்டெய் பிரிவை சேர்ந்த எங்கள் கட்சியின் மாநிலக் குழு செயலாளரை விட்டுவிட்டு செல்ல வேண்டி இருந்தது. இதே நிலைதான் நீங்கள் மெய்டெய் பகுதிக்குள் நுழை யும் பொழுதும்! அங்கு இரு வெவ்வேறு பிரதேசங்கள் உள்ளன. போர்ச் சூழல் போல உள்ளது. நீங்கள் ஒரு பிரிவின் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல வேண்டும் எனில் அங்கு மூன்றுவிதமான தடைகள் உள்ளன. அவை பாதுகாப்பு படைகளால் அல்ல; உள்ளூர் மக்க ளால் கண்காணிக்கப்படுகிறது. அங்கு மனிதத் தன்மையை இல்லா மல் செய்கிற நிகழ்வுகள் உருவாகிக் கொண்டுள்ளன. மக்கள் மற்றும் சமூகம் ஆகிய இரு தளங்களிலும் இது நடந்து கொண்டுள்ளது. அரசாங்கத்து க்கு இந்த இன மோதலை உருவாக்கிய தில் பாஜக
‘இரட்டை இன்ஜின்’ மிகப் பெரிய பங்கு உண்டு. தேர்தல் காலங்க ளில் குக்கி ஆயுதப் பிரிவுகளை பாஜக ஒன்றிய அரசும், மாநில அரசும் ஆத ரித்தன. குக்கி பிரிவினரே, பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வருடன் ஒருவித ஒப்பந் தம் செய்யப்பட்டது என பதிவு செய்துள்ளனர். தங்கள் ஆதரவுடன் தான் பைரேன் சிங் முதல்வரானார் என குக்கி பிரிவினர் கூறுகின்றனர். குக்கி பிரிவு சட்டமன்ற உறுப்பி னர்கள் 10 பேரில் ஏழு பேர் பா.ஜ.க. வினர். அதில் இருவர் அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் குக்கிகள் மியான்மரிலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர்ந்தவர்கள் என முதல்வர் கூறுகிறார். அதனையே ஒன்றிய உள் துறை அமைச்சரும் மக்களவையில் பிரதிபலிக்கிறார். தங்களிடமிருந்து வாக்குகளை பெற்றுவிட்டு இப்பொ ழுது தங்களை சட்ட விரோத அகதி கள் எனவும் போதை கடத்தும் பயங்கர வாதிகள் எனவும் பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என குக்கி பிரிவினர் கொந்தளித்துப் போயுள்ளனர். இப்பொழுது நாகா பிரிவினரும் தலையிட்டுள்ளனர். இந்த வன்முறை தங்களது நிலத்தில் நடைபெறுவதாக அவர்கள் கூறுகின்றனர். நாகா ஒப்பந்தம் மணிப்பூர் நிலம் குறித்து பல அம்சங்களை கொண்டுள்ளது. மிசோரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசாங்கம் விரைவில் தீர்வு காணவில்லை எனில் வட கிழக்கு இந்தியா முழுவதும் இந்த பிளவு பரவும் ஆபத்து உள்ளது. நிவாரண முகாம்க ளில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. உணவு மற்றும் சுகாதார வசதிகள் இல்லை. எவ்வித தடுப்பூசி திட்டங்களும் இல்லாமலும் சத்தான உணவு இல்லாமலும் குழந்தைகள் முகாம்களில் பிறக்கின்றன.
கேள்வி : மணிப்பூர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு என்ன உடனடி முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும்?
பதில்: மணிப்பூரில் 60,000 மத்திய படைகள் உள்ளன. ஆனால் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. அரசாங்கம் தெளிவான வழிகாட்டுதல்களை தந்திருந்தால் பல வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப் பட்டிருக்கும். அரசாங்கம் உள்துறை அமைச்சரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவை அங்கு அனுப்ப வேண்டும். அந்த குழு மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பிரிவை யும் சந்தித்து அவர்களின் கோரிக்கை கள் குறித்து கேட்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் மக்களின் விருப் பத்தின் பேரில் தீர்வு காண முயல வேண்டும். வன்முறையின் முதல் நாளி லிருந்தே இதனை செய்ய வேண்டும் என நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். இத்தகைய சூழல்கள் காஷ்மீரில் உருவான பொழுது சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம், ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் அங்கு வெவ்வேறு சமயங்களில் சென்ற மூன்று தூதுக்குழு க்களில் நானும் பங்கேற்றேன். அந்த மூன்று சமயங்களிலும் அப்பொழுது சில முடிவுகளை முன்வைத்து தீர்வு காண முயன்றோம். இப்பொழுது ஏன் அரசாங்கம் அப்படி செய்ய முன்வர வில்லை?
தமிழில்: அ.அன்வர் உசேன்