புதுதில்லி, மார்ச் 3- உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் அடுத்த வாரம் நிறைவடைந்ததும் பெட் ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட லாம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. சர்வதேச அளவில் கச்சா எண் ணெய் விலை, கடந்த வாரம் பீப் பாய்க்கு 100 அமெரிக்க டாலரை (ரூ.7,500) கடந்தது. தற்போது 110 டாலரைத் (ரூ. 8,250) தொட்டுள்ளது. எனினும் 5 மாநிலத் தேர்தலுக்காக கடந்த 118 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலைகளை மோடி அரசு உயர்த்த வில்லை. இந்த வகையில், எரிபொருள் விலையில் இடைவெளி ஏற்பட்டுள்ள தாகவும், அதை ஈடுசெய்யும் வகை யில், மார்ச் 7-ஆம் தேதிக்குப் பிறகு, பெட்ரோல் - டீசல் விலைகள் லிட்ட ருக்கு ரூ. 9 வரை உயர்த்தப்பட லாம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. கடந்த 2014 ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் அதிகபட்சமாக கடந்த மார்ச் 1-ஆம் தேதி இந்தியா கொள் முதல் செய்யும் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 102 அமெரிக்க டாலரை (ரூ.7,650) தாண்டியிருப்ப தாக எண்ணெய் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, 5 மாநில சட்டப்பேர வைத் தேர்தல்களும் நிறைவடைந்த தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த் தப்படலாம் என்று ஜேபி மார்கன் தரகு நிறுவனமும் கூறியுள்ளது.