states

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லையாம் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

புதுதில்லி, ஆக. 29 -

      மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஒன்றிய பாஜக அரசு,  உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

     பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த நிதிஷ் குமார் தலைமையிலான அரசு முடிவெடுத்தது. கணக்கெடுப்பு பணியை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்து, முதற்கட்டப் பணியை 2023 ஜனவரி 7 அன்று துவங்கி ஜனவரி 21 அன்று முடித்தது.

    முதற்கட்ட கணக்கெடுப்பில், மாநிலத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்ட  கணக்கெடுப்புப் பணி, ஏப்ரல் 15 அன்று  துவங்கி மே 15 வரை நடைபெறுவ தாக இருந்தது.

    இந்நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சில சமூக  அமைப்புகள் சார்பிலும், தனிநபர்கள் சார்பிலும் வழக்குகள் தொடரப் பட்டன.  

    ஆனால், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. அத்துடன் இந்த வழக்கை விரைந்து விசாரிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.

     அதன்படி, பாட்னா உயர் நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன. இவற்றை விசாரித்த நீதி மன்றம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முதலில் இடைக் கால தடை விதித்தாலும், பின்னர், அதற்கு அனுமதி வழங்கியது.  

     பாட்னா உயர் நீதிமன்றத்தின் இந்த  உத்தரவுக்கு எதிராக ‘ஏக் சோச் ஏக் பிரயாஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு  உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

     அங்கு உச்ச நீதிமன்றம் உடனடி தடை எதுவும் விதிக்காத நிலையில், பீகார் அரசு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி யை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் முடித்து, அதுதொடர்பான தரவுகளை மாநில அரசின் இணையதளத்தில் ஆகஸ்ட் 12 அன்று பதிவேற்றம் செய்தது. எனினும், பாட்னா உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடரப் பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி  ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற  அமர்வு, 7 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

     அதன்படி ஒன்றிய பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் திங்களன்று பதில்  மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “ஒன்றிய அரசைத் தவிர வேறு எந்த அமைப்பாலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடி யாது” என குறிப்பிட்டுள்ளது. “மக்கள்  தொகை கணக்கெடுப்புச் சட்டம், 1948-இன் படி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய அரசாங்கத்திற்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது” எனவும் ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது.

தேஜஸ்வி கண்டனம்

      ஒன்றிய அரசின் இந்த பதில் மனு வுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ் வி கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசுக்கு எந்தவொரு புரித லுமே இல்லை. எப்படி உண்மையை ஒடுக்கலாம், மறைக்கலாம் என்பதை மட்டுமே ஒன்றிய அரசு தெரிந்து வைத்திருக்கிறது. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்தி ரத்தில்கூட சாதிவாரி மக்கள் தொகை  கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்புக்கு எதிராகத்தான் பாஜக இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. மாறாக,  சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடு ப்பை பாஜக ஆதரிப்பதாக இருந்தால்,  நாடு முழுவதற்குமே அதனை மேற் கொள்ள ஒன்றிய அரசு மூலம் உத்தரவிடட்டும்” என்று கூறியுள்ளார்.