states

img

பணமதிப்பு நீக்கம்: மாறுபட்ட தீர்ப்பின் பொருத்தப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஊடகங்கள்

புதுதில்லி, ஜன. 6- ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உச்சநீதிமன்றத்தைக் கடந்து சென்றாலும் அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட்டதாக கருதிவிட முடியாது. இந்த தீர்ப்பு மோடி அரசுக்கு நிவாரணம் அளித்தாலும், கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களிடையே பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய காயம் இன்னும் ஆறவில்லை. அதனால்தான் நீதிபதி நாக ரத்னாவின் மாறுபட்ட தீர்ப்பு மக்களுக்கு நம்பிக்கை யை அளிக்கிறது. தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு சாதக மாக இல்லை என்று முதல்நாளே பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை தேசிய ஊடகங்களும் உறுதி செய்தன.

இந்துஸ்தான் டைம்ஸ்

இந்த ஆண்டு ஒன்பது சட்டமன்றத் தேர்தல்களும் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடக்கின்றன. தேர்தலில் பணமதிப்பிழப்பின் தாக்கத்தை எதிர்க்கட்சி கள் எழுப்பும். பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து, நாட்டின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளவே செய்தது என்பது அம்பலமாகும். இந்த விவகாரத்தில் சட்டரீதியான தீர்வுக்கு உத்தரவிட்டா லும் அரசியல் போர் தொட ரும் எனஇந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவ டிக்கை சிறுதொழில் மற்றும் அமைப்புசாரா துறை களை ஒடுக்குவதாக அந்த கட்டுரை விவரிக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

பணமதிப்பு இழப்பு  நடவடிக்கை ஒன்றிய அரசின் செயல்பாட்டு சுதந்திரத்திற்கு குழிபறித்துள்ள தாக சுட்டிக்காட்டிய நாகரத்னாவின் கருத்து வேறு பாட்டிலிருந்து ரிசர்வ் வங்கி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தலை யங்கம் கூறியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து உரு வான பணமதிப்பிழப்பு யோசனை ரிசர்வ் வங்கி யின் பரிந்துரையாக மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கி சுதந் திரமான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்டது என்பதற்கு இதுவே சான்றாகும். கொள்கையில் ஏற்பட்ட குளறுபடியை அர சாங்கத்துக்கு தெளிவுபடுத்தவும் ரிசர்வ் வங்கி முன்வர வில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொரு ளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த தீர்ப்பு மவுனமாக விட்டுள்ளது. வெறும் அறிவிப்புகளுக்கு  அப்பால் நாடாளு மன்றத்தின் இறையாண்மையை வலியுறுத்தும் மாறுபட்ட தீர்ப்பை கவனமாக படிக்குமா றும் மத்திய வங்கிகளுக்கு அந்த நாளிதழ் அறிவுறுத்தி யுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா

மாறுபட்ட தீர்ப்பு மக்கள் கருத்தை பிரதிபலிப்ப தாக உள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா தலை யங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பணமதிப்பிழப்பு நட வடிக்கையானது பொதுவான பொருளாதார விவாதத்துடன் கூட ஒத்துப்போவதில்லை என விமர்சித்த அந்த நாளிதழ், கருப்புப் பணம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பதில் இந்த கொள்கை வெற்றி பெற்றுள்ளதா என்பது சந்தேகம் என்று கூறியுள்ளது. மற்ற தேசிய ஊடகங்களும் இதே போன்ற விமர்சனங்களை வெளியிட்டன.