states

img

இந்திய நிதியமைச்சகத்தின் அறிவு திவாலாகி விட்டது!

சுப்பிரமணியசாமி கடும் சாடல்

புதுதில்லி, ஏப்.6- உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத் தேர்தலை யொட்டி, பெட்ரோல்- டீசல் விலை யை கடந்த நான்கரை மாதங்க ளாக உயர்த்தாத மோடி அரசு, கடந்த 2 வாரங்களாக மீண்டும் விலை உயர்வை ஆரம்பித்துள் ளது. இதுவரை 10 ரூபாய் அள விற்கு, பெட்ரோல், டீசல் விலை யை உயர்த்தியுள்ளது.  இது எதிர்க்கட்சியினரை மட் டுமே, ஆளும் பாஜக கூட்டணி கட்சி யினரையே கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த வகையில், பாஜக மூத்த  தலைவரும், அக்கட்சியின் எம்.பி. யுமான சுப்பிரமணியசாமி, எரி பொருள் விலை உயர்வைக் கடு மையாக சாடியுள்ளார்.  இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வால் நாட்டில் கிளர்ச்சி ஏற் படும் சூழல் உள்ளது. இப்படி செய்வது நிதியமைச்சகத்தின் அறிவு திவாலாகி விட்டது என்ப தையே காட்டுகிறது. இது தேச  விரோதமும் கூட! பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு பட் ஜெட் பற்றாக்குறையை போக்கு வது என்பது முழுக்க முழுக்க ஒன் றிய அரசின் திறமையின்மையை யே காட்டுகிறது” என்று குறிப் பிட்டுள்ளார். “எரிபொருட்களின் விலையை குறைக்க நீங்கள் ஏதாவது மேஜிக் வைத்துள்ளீர்களா?” என்று டுவிட் டர் வாசி எழுப்பிய கேள்விக்கும், “வரிகளை நீக்க வேண்டும். விற் பனை விலையில் 60 சதவிகி தத்தை வரியாகவே எந்த நாடும் செலுத்தவில்லை” என்றும் சுப்பிர மணியசாமி பதிலளித்துள்ளார்.